எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும்
கொங்கு ஆர் பூந் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலைமேல் கெழுமீரோ நுமரோடே (1)
Gentle red-legged heron who feeds in the inlet of our seashore and rests here happily, carry my message to our pot-dancer dwelling in sacred Mūḻikkaḷam, his crown cool tulasī blossoms heavy with honey. Then will you and your companions honor my head with your feet?
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மால் இழிப்புண்டு?
தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே (2)
Flocks of loving waterbirds, you and your mates never separate from your own. Listen: he dwells among his companions in beautiful Mūḻikkaḷam. My kin condemn us here, and I suffer humiliation through my own people. Am I truly unfit for him there?
தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை தேரும்
கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும்
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக் கமலத்து இலைப் போலும் திருமேனி அடிகளுக்கே (3)
Listen—am I unfit for the Master? Flocks of storks and waterbirds searching for food beside broad waters, go to him in cool Mūḻikkaḷam. His eyes, hands, and feet resemble red lotus blossoms, his mouth is ripe red fruit, and his sacred body a lotus leaf.
திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய்
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள்
திருமேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன்
திருமேனி ஒளி அகற்றி தெளி விசும்பு கடியுமே? (4)
Beautiful clouds at the mouth of the flourishing city called sacred Mūḻikkaḷam, carry the message of deed-burdened me to the Master of the sacred body. If you say, “Grant your sacred body to her,” will he strip away your bodily radiance and chase you from the clear sky?
தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்து உறையும்
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்புமினே (5)
Radiant clouds racing across the clear sky, encircled by fire and flashing lightning, carry my message to the bright Light dwelling in sacred Mūḻikkaḷam—to him whose honeyed curls drip nectar and who dwells in the mind of deed-burdened me as a sacred realm clearer than heaven.
தூது உரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள்
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும்
மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே (6)
Flocks of bees with pure-speaking mouths, tell him my message. You hum among blossoms and drink honey in the groves of Mūḻikkaḷam. If you carry the words from my mouth to him who holds the Lady upon his chest, tell him my radiant bangles and girdle are slipping away.
சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கயக்கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒருநாள் ஓர் தூய் மாற்றம்
படர் பொழில்வாய்க் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே. (7)
He took my shining bangles and girdle and abandoned the shoulders of deed-burdened me. Flocks of waterbirds in spreading groves, behold the far-famed Lord of sacred Mūḻikkaḷam, lotus-eyed and coral-radiant-lipped, and one day do me this service: bring back one pure answer.
எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும்
புனக்கொள் காயா மேனிப் பூந் துழாய் முடியார்க்கே (8)
Do me one service, flocks of bees and dragonflies who seek food within great groves and gather there to your hearts’ delight. Carry my message to him of the wild kāyā-flower body and flowering tulasī crown, dwelling in sacred Mūḻikkaḷam encircled by massive, strong walls.
பூந் துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையாருக்கு
ஏந்து நீர் இளம் குருகே திருமூழிக் களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக்கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே (9)
Young waterbird by the swelling waters, speak to the Lord of sacred Mūḻikkaḷam, wearer of flowering tulasī and bearer of the golden discus: “Her ornamented, uplifted breasts have grown pale, and tears fill her paired flower-eyes. It is not gracious that you should take yourself away.”
தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே (10)
Lofty-gaited swans who feed beside the broad waters and dwell there in deep delight, say to the Lord of sacred Mūḻikkaḷam, “This is not gracious. Her great body has grown thin, her girdle has lost its hold—come before even the life within her body disappears.”
ஒழிவு இன்றித் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடரை
ஒழிவு இல்லா அணி மழலைக் கிளிமொழியாள் அலற்றிய சொல்
வழு இல்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் நோய் அறுக்குமே (11)
The ornamented, parrot-speaking girl cried ceaseless words to the radiant Light who dwells without departure in sacred Mūḻikkaḷam. Caṭakōpa of bountiful, faultless Kurukūr perfectly voiced these ten within his imperishable thousand. They sever disease.