உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே? (1)
My heart melts, and desire swells beyond life itself. What shall your servant do whenever I remember the wonder of the mysterious Lord who entered sacred Kāṭkarai, where kāvi flowers perfume every street?
நினைதொறும் சொல்லும்தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினைகொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே (2)
Each time I think, each time I speak, my heart breaks and dissolves; when I sing the glory of your mighty acts, my insatiable life burns. My Father of southern Kāṭkarai, with its flowering groves and springs, I cannot conceive the proper way to serve you.
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மைசெய்து என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் (3)
Through graciousness he deceived my heart and entered, softened me, became my life, and consumed my life. I cannot comprehend the theft of my Father, raincloud-hued Lord of southern Kāṭkarai amid groves abundant with beauty.
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு அருளே (4)
I cannot comprehend the sacred grace that consumed my little, precious life: my Father of southern Kāṭkarai, where fragrant groves spread perfume, contains every world within himself and, by the proper order, also stands within them all.
திரு அருள் செய்பவன் போல என்னுள் புகுந்து
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
திரு வளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே (5)
As though he intended to bestow sacred grace, he entered within me and consumed both body and insatiable life together. Such are the thefts of my Kaṇṇan with his growing dark form, my Father of southern Kāṭkarai amid groves flourishing with sacred bounty.
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க் கோது இது
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே (6)
My Kaṇṇan’s theft stands before me as perfect justice. What fault did my insatiable life possess, that beautiful-eyed Kaṇṇan consumed it? Fallen into grief, I lament by night and day, crying “My Kaṇṇan!” and praising his Kāṭkarai.
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோள் குறைபட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே (7)
Whenever I praise Kāṭkarai and cry “Kaṇṇan!” within that praise, the disease of longing sharpens; I think, dissolve, and melt away. The mysterious one, appearing to take me as his servant, consumed my life. Its hold is broken—does my precious life possess any power now?
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்
காள நீர் மேகத் தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது? என் ஆர் உயிர் பட்டதே (8)
He did not merely take possession; he came and consumed my very life. Day after day he comes and consumes me completely. Was my insatiable life merely enslaved to my Father of southern Kāṭkarai, dark as a water-laden cloud? It has suffered far more.
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனி வாயது ஓர்
கார் எழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வவாரிக்கே? (9)
My insatiable life has been seized—my own life seized—by the divine ocean of beauty: great-petaled lotus eyes, fruit-red mouth, body a lovely dark cloud, four broad shoulders rich in splendor, making his temple in southern Kāṭkarai.
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே (10)
“If I see you, I will scoop you up and swallow you.” I yearned for this, but before I could act, he spread wide within me and drank me whole. How formidable is my Father of cloud-dark Kāṭkarai!
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப் பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே (11)
Upon the Lord who became fierce and killed Kaṃsa, Caṭakōpa of southern Kurukūr, ringed by bannered walls, spoke these ten within his beautifully formed thousand. Through them, see that birth reaches its end and is destroyed.