இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடைகாள்
என் உயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ? (1)
Female cuckoos, you and the mates dear as your lives keep calling one another—how long will you babble here and hurt my life? You do not call Lord Kaṇṇan, who is my life’s own eye. If you call only to seize my life and give it to him, can so much crying be necessary?
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்?
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே (2)
Alas, such excess is not needed, female aṉṟil birds. How long will you and your mates melt and call in longing? Ingenious Govinda is true to no one. Why say even this now? My life is already in his hands.
அவன் கையதே எனது ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே?
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே? (3)
My insatiable life is in his hands, female aṉṟil birds. At whose bidding do you enter the water and sport while your mates surround you? Does deed-burdened I, who performed no austerity, still possess a life here? At whose word does it remain after hearing your yearning cries?
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேல் கிளை கொள்ளேல்மின் நீரும் சேவலும் கோழிகாள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே (4)
Though he hears your cries, our mysterious Kaṇṇan does not reveal himself. Hens and roosters, do not climb to the upper branches. Our speech, mind, and deeds have gone there to him; body and life remain between, standing and wandering.
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் (5)
My pūvai birds who hover and wander in the air, there is no quarrel between you and me; do not babble. Displaying Indra’s magical illusions, the Lord of Śrī’s chest took all seven worlds. Now he has carefully resolved to consume our very life.
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் (6)
Little parrot-child whom I lovingly raised, do not babble in your sweet voice. Kakutstha, my precious life, has a mouth like your red one; he is Kaṇṇan with beautiful eyes, hands, and feet, and your fresh green-dark hue. He joined me and departed.
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டம் இல் என் கருமாணிக்கம் கண்ணன் மாயன்போல்
கோட்டிய வில்லொடு மின்னும் மேகக் குழாங்கள்காள்
காட்டேல்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே (7)
He joined and left: lovely lotus eyes, red lips, my unfading dark sapphire—Kaṇṇan, the mysterious one. O banks of cloud, flashing with lightning and a curved bow, so like him: do not show me your forms. They are death to my life.
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர்ப் பழஞ் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்! பண்பு உடையீரே (8)
I begged you, saying he is death to my life; instead, tender cuckoo children, you killed me by babbling Kaṇṇan’s names. I fed you curd with aged rice, fruit, milk, and sweet pudding, trained your speech, and nourished you well. Is this your gracious nature?
பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான் (9)
Virtuous bees and dragonflies beside your mates, do not hum your melodies. Your sweet voices resemble a sharp spear thrust into an open wound. Great-eyed Kaṇṇan’s eyes are lotuses blooming in a broad pool of cool, deep water. He drew near only to consume our life and rise away.
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள்காள் பயின்று என் இனி?
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே (10)
He approached, and we too became one with the sovereign of our heavenly land. Fine flocks of herons in the fields, what use is further practice now? This good, ornamented body has slowly lost the embrace; let fresh, flourishing bliss arrive and thrive everywhere.
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே (11)
The mysterious Lord gave Caṭakōpa of southern Kurukūr grace to praise his fame through many ages in which joy arrives and flourishes everywhere. These nine and one among Caṭakōpa’s thousand will make all three worlds melt.