மை ஆர் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே (1)
Tirumāl, the red Lady with collyrium-dark eyes sits upon her lotus and joins your sacred chest. Your hands hold the fierce-rayed discus and curling conch. My very eyes long to behold you.
கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாதொழியேன் என்று நான் அழைப்பனே (2)
My eye and beloved, my heart takes up one thought—beholding you—and stands speaking from that intention. Though forever difficult for heavenly sages to see, I call out, “I will not remain apart without drawing near.”
அழைக்கின்ற அடிநாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே (3)
Your dog-servant calls, and my heart melts like a dog wagging its meager tail over its food. You lifted the mountain against the rain and guarded the cattle. Bewildered, I fear that grace itself is slipping away.
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்கண்
பெறுவது எதுகொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே (4)
“This is what must come: I shall be enslaved to you. But what will I gain from you?” My foolish heart churns. Master, rare Hari whose nature is forever difficult for celestials and dānavas to know!
அரியாய அம்மானை அமரர் பிரானை
பெரியானை பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளிகொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே (5)
My thought longs to see the ankleted feet of the dark one: the rare Lord, the lion-form Master, sovereign of immortals, the great one who first created Brahmā, reclining upon the bright-striped serpent-bed.
கருத்தே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே (6)
You are my very thought. Longing to behold you, I established you firmly as a presence within my heart. Ancient one among every god, resplendent radiant Light, peerless in transcendent height—my heart delights in contemplating you.
உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்பால்
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா
மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே (7)
My heart rejoices as it contemplates you, and within the heart’s interior you chose, settled, and made your dwelling, stainless one. Becoming the man-lion form, your claws split the broad chest of the swelling dānava into two.
உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம்
கரு ஆகிய கண்ணனை கண்டுகொண்டேனே (8)
He takes form as every one of the six religions and stands as the substance of all things; he is the formless, primal origin and the seed of all the gods. I have beheld and possessed that Kaṇṇan.
கண்டுகொண்டு என் கண் இணை ஆரக் களித்து
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே (9)
Having beheld him, I rejoiced until my paired eyes were filled, and severed ancient deeds together with their bonds. As servant of heaven’s immortal Lord, I spoke word-garlands so his devotees might feed upon nectar.
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே (10)
“He is my servant.” Thinking this, the lofty one grants me boundless grace. His banner is the beautifully winged bird of perfect fame; without falling short, his foot measured the world. Reaching him, I, his servant, was saved.
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை
சேறு ஆர் வயல் தென் குருகூர்ச் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே (11)
Upon him who crushed the elephant of unappeasable rut, Caṭakōpa of southern Kurukūr, amid muddy fields, spoke these ten within his thousand arranged in hundreds. They will raise their reciters to the one who is the immortals’ own sweet life.