ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாரயணன் நங்கள் பிரான் அவனே (1)
He becomes one thousand and sustains the seven worlds; he possesses a thousand names and peerless majesty. His noble sacred body is dark as a gathered raincloud. He alone is Nārāyaṇa, our Lord.
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே (2)
He alone fashioned and raised the broad world; he alone swallowed, released, and measured it. He is that one, and that one, and that one; he is everything else as well. This we have come to know.
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே (3)
The Vedas and scriptures of rare meaning knew him; they knew him as the rare reality to be grasped. Worshiping Hari, all who understood knew him as the medicine that severs disease.
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம்
தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே (4)
“He is the medicine for the delight of our enjoyment!” So the hosts of great gods babble of the Lord. Dark deity, our Master Kaṇṇan, is the God who grants the heavenly world. Heart, see that you never let him slip away.
மனமே உன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்!
புனம் மேவிய பூந் தண் துழாய் அலங்கல்
இனம் ஏதும் இலானை அடைவதுமே (5)
Heart, deed-burdened I implore you and declare this solemnly: see that you do not let it slip. Our sole purpose is to reach the incomparable one whose garland is beautiful cool tulasī blossoming in the wild.
அடைவதும் அணி ஆர் மலர் மங்கைதோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே (6)
He reaches and closely embraces the shoulders of the ornamented flower Lady; what he gives asuras is fierce war. He churns nectar from the ocean, and my heart breaks open for him alone, wholly and at once.
ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே (7)
Becoming the man-lion joined body to body, he split one chest with sharp nails. Without distinction between night and day, my heart thinks only one thought: to behold great Vaikuṇṭha where he dwells.
இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே (8)
To make both kinds of deeds disappear, save us, and prevent us from entering another embodied birth, he stands at Veṅkaṭam upon this long earth. The gods themselves go there and worship with folded hands.
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுதும் என்னும் இது மிகை ஆதலின்
பழுது இல் தொல் புகழ்ப் பாம்பு அணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே (9)
“They worship bearing great flowers, water, flame, and incense, and so they will rise”—such talk is excessive. Anciently faultless in fame, reclining upon the serpent-bed, I do not know the way to embrace your feet.
தாள தாமரையான் உனது உந்தியான்
வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ்கோ உன சீலமே? (10)
The lotus-seated one is born from your navel; the ruler of the long bright axe dwells within your body. Immortals become your servants and worship you. Even daily, how could I praise the humility of your nature?
சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோலம் நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே (11)
Upon the feet of him whose gracious nature has no boundary, Caṭakōpa of beautiful, expansive Kurukūr spoke these ten within his garland of a thousand. Those devoted to them are naturally destined to ascend Vaikuṇṭha.