மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே (1)
Approach at evening, worship, and rise so deeds may perish; morning and evening offer lotus blossoms to the paired feet of him who sat as an infant upon the banyan leaf, in sacred Kaṇṇapuram, ringed by walls the ocean waves strike.
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே (2)
Offer flowers opening with honey and bow. Servants, contemplate sacred Kaṇṇapuram every day and rise in worship: silver-fitted walls surround its moat, and fields where crabs gather encircle it.
தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே (3)
Servants, so your sorrows may depart, unite as one, offer freshly opened, unwithered flowers, and bow to the cosmic sovereign, Lord of immortals, in sacred Kaṇṇapuram encircled by groves where bees sing.
மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே (4)
Offer unfading flowers and worship the honey-sweet bridegroom of gentle, doe-eyed Nappiṉṉai. The great Lord chose sacred Kaṇṇapuram, surrounded by walls that thrust into heaven. His refuge will become ours.
சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே (5)
His feet become refuge for everyone who reaches them; when death comes, the Lord grants them Vaikuṇṭha. The earth’s sovereign in sacred Kaṇṇapuram, ringed by fortress-walls, becomes love itself to those who love him.
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே (6)
He becomes the beloved of everyone who reaches his feet. He tore the asura’s body and red-gold chest. The beloved Lord of sacred Kaṇṇapuram, ringed by fine gold-fitted walls, is forever true to those who are true to him.
மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே (7)
He becomes real to everyone who worships him with desire; to all who worship only outwardly, he becomes unreal. The Master of sacred Kaṇṇapuram, where vāḷai leap in the fields, is near to those who embrace him within their hearts.
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே (8)
He draws near to everyone who reaches his feet; disease does not approach, and he destroys birth and rules them. Bow every day to the feet of the supreme Lord in sacred Kaṇṇapuram, ringed by walls fitted with jewels and gold.
பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என்குறை?
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே (9)
Worship his feet each day and disease grows cool; fault will not cling. If this is so for me, what lack can remain? Those who reach the primal Lord of sacred Kaṇṇapuram, beloved of Veda-speaking tongues, possess no suffering.
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே (10)
If there is no suffering for me, what deficiency can now remain? The Lotus Lady dwells upon his sacred chest. Speak each day of sacred Kaṇṇapuram, ringed by stone-fitted walls, and the condition of sorrow will never approach.
பாடு சாராவினை பற்று அற வேண்டுவீர்
மாடம் நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே (11)
You who desire suffering not to approach and the bonds of deeds to be severed: sing these ten within the thousand Tamil songs spoken by Caṭakōpa of high-mansioned Kurukūr; dance, and bow to his feet.