கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே (1)
Wives taken in marriage, children, kindred, relations, and others offer only such affection as accords with what they see and receive; no other love is there. See: we have no companion and no salvation except becoming servants of the Lord who swallowed all eight directions and everything below and above.
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள்போல் சுவைப்பர்
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகிலைப்
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே (2)
Relatives and others appear as companions and supports, but if wealth comes near, they cling and drink like leeches. See: there is no true treasure and no way to cross safely except taking as our raft the dark raincloud who pierced seven trees with one arrow.
பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்று எழுவர்
இருள்கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை
மருள்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே (3)
When they see wealth moving through your hands, they rise to receive you crying, “Praise!” When poverty brings dark suffering, not one will even ask, “What has happened?” See: there is no fortress and no salvation except becoming the grace-filled servant of him who was born in northern Mathurā so the deluded asuras and their deeds would perish.
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே (4)
Those arranged as your protectors for the hour when support is gone become rafts pierced through by wounds; however much you gave them before, they remain the same. Why describe it further? See: there is no effective means and no safe crossing except taking refuge in the generous fame of him born in northern Mathurā.
சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து இன்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே (5)
Sweet-spoken people approve themselves as clever and enjoy honeyed pleasures; after remaining a while, they attach themselves elsewhere. See: there is no joy and no salvation except meeting him as his servant—the one born in northern Mathurā so the asuras of terrifying deeds would perish.
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்யப் போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே (6)
Alas, see that there is no joy here, for people do not reflect upon what truly exists. How many from ancient times have appeared, passed, and vanished? In brief, there is no other way to cross safely than speaking the generous fame of him born in flourishing, ancient northern Mathurā.
மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே (7)
In brief, we have said it: there is no other way for any life upon this great earth. Alas, no agitation is needed; thought alone suffices. It is no fault—see that the good life is to learn the flawless glory of our cowherd Father, born in northern Mathurā, and abide in it each day.
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவிப்
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே (8)
See, alas, that this is the virtue of living: praising the wondrous Lord’s feet as the hours pass, with no baseness within. Nothing surpasses the generous fame of him born in northern Mathurā; it is one’s companion through life and one’s supporting companion at the fall.
யாதும் இல்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம்
மா துகிலின் கொடிக்கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே (9)
Again and again, people imagine nothing is greater than some passing thing; they adorn and stretch the ear and spend even the final span of life in such play. See: there is no refuge but Kaṇṇan, his shoulders rich with pollen, born in northern Mathurā where great cloth banners crown the mansions.
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே (10)
See that there is no refuge but Kaṇṇan. Leaving that truth established, he came and was born in northern Mathurā solely to relieve the earth’s burden. If you truly possess anything, place it at his feet and be saved. Do not calculate: nothing you call yours exists apart from him.
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே (11)
Resolving that nothing whatever exists apart from him, Caṭakōpa of Kurukūr spoke upon pollen-shouldered Kaṇṇan these ten among his thousand faultless, luminous Tamil verses. The great ones able to recite them have possessed and ruled us from ancient times.