நெடுமாற்கு அடிமை செய்வேன்போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும்
தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார்
அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என் அந்தோ!
வியன் மூவுலகு பெறினுமே? (1)
Suppose I cunningly imagined, “I shall serve Great Māl,” and considered the feat by which every evil destiny and confusion might be wholly avoided. For cruelly deed-burdened me, there is nothing but reaching the feet of his servants. Alas, what other release could there be—even if I gained the vast three worlds?
வியன் மூவுலகு பெறினும் போய்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம்போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக்கீழ்ச்
சயமே அடிமை தலைநின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே? (2)
Even if I gained the vast three worlds and departed to become sovereign by myself, could it equal the benefit and joy granted to sinful me in this very birth: worshiping the sacred feet of those who stand foremost in unwavering service beneath the flower-adorned ankleted feet of the Master whose sacred body resembles a storm cloud?
உறுமோ பாவியேனுக்கு இவ்
உலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என்
செந்தாமரைக்கண் திருக்குறளன்
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை
ஆண்டார் இங்கே திரியவே? (3)
Could it be granted to sinful me—not merely to enter beneath the fragrant, fresh lotus feet of my red-lotus-eyed sacred dwarf, whose little noble body rose to fill all three worlds, but to wander here governed by his servants appearing as humble human beings?
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோலத்த பவளவாய்ச்
செந்தாமரைக்கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன்கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழிபட்டு ஓட அருளிலே? (4)
What disgrace could touch me as I wander here? My Master, who once swallowed and released the twofold great earth, has red lotus eyes and a coral mouth beneath his righteous sceptre. His swelling sevenfold glories fill their mouths, his sense-enchanting form fills their minds, and fitting flowers fill their hands. May I run behind worshiping them by grace.
வழிபட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்ச்
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிபட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டு ஓடும் கவிஅமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே? (5)
Even if I worshiped, ran after him, received grace, and remained blissfully beneath the wondrous Lord’s beautiful lotus feet within a flood of radiant light rushing in whorls—could that equal the complete savor of being born in this lowly, passing body, learning his glory, and drinking the poem-nectar that streams through speech?
நுகர்ச்சி உறுமோ மூவுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகர்ச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே? (6)
Could even liberation, the attainment of all three worlds, equal the savor of the great and peerless fame of my Father? Golden discus in hand, he felled the elephant with its unequaled mottled red face; riding the bird, he roams after shattering and consuming every life of the long-limbed, flame-eyed, red-haired asuras.
தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே (7)
Rather than merely entering beneath the tender-shoot feet of the peerless great deity whose unique vast fame endures forever—who manifested himself as the seed of great sage Brahmā and caused the three worlds to sprout—may the abundant joy of deep fellowship with his servants be granted to us every day.
நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங் கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலைபோல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே. (8)
May the gathering of his own be granted to us daily. He fashioned the cool, water-filled ocean and reclined like a jeweled mountain, extending peerless multitudes of feet, shoulders, and crowns, possessing a spreading forest of long, flowering wish-fulfilling trees and the orbits of many full suns.
தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டு ஆதி பல் படையன்
குமரன் கோல ஐங்கணை வேள்
தாதை கோது இல் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே (9)
The ingenious Lord destroys the fierce deeds of his servants’ gathering. He bears many weapons—battle-discus, conch, sword, bow, mace, and more—and is father of the ever-young, beautiful five-arrowed god of love. May solitary me receive the blessed distinction of becoming servant to the servants of the servants of his flawless servants.
வாய்க்க தமியேற்கு ஊழிதோறு
ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள்
பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார் தம்
அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் நல்ல கோட்பாடே (10)
Age after age, through age upon age, my four-shouldered Father endures with a body like the great kāyā flower and a golden discus in hand. May solitary me receive this noble rule of life: to become the subject of those servants of the servants of the servants who never leave him, for they are our sovereigns.
நல்ல கோட்பாட்டு உலகங்கள்
மூன்றினுள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அம் தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டீர் மக்களே (11)
Upon lotus-eyed Kaṇṇan, who fills all three worlds governed by the noble rule, Caṭakōpa of lovely, cool Kurukūr spoke his thousand. Those who master these ten within it will live household lives in a blessed state, together with the wives and children they have received.