மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதிச் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம்போல் வருவானே
ஒருநாள் காண வாராயே (1)
Mysterious dancer, Vāmana, Kaṇṇan of deed-burdened me! Your eyes, hands, and feet are pure red flowers; your radiant crimson mouth a bud; your sacred body has the dark beauty of blue; it is a cool green leaf and a broad, long, fragrant lotus pond coming toward me. Come one day, that I may behold you.
காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நல் நாட்டு அலமந்தால்
இரங்கி ஒருநாள் நீ அந்தோ
காண வாராய்! கரு நாயிறு
உதிக்கும் கரு மா மாணிக்க
நாள் நல் மலைபோல் சுடர்ச் சோதி
முடி சேர் சென்னி அம்மானே! (2)
Again and again I cry, “Come, that I may see you!” until your servant’s eyes and mouth grow parched, and I wander the good land in shame. Alas, take pity and come one day! O Master whose crowned head rises like a dark morning sun above a great black-sapphire mountain, its summit joined to blazing radiance—come, that I may behold you.
முடிசேர் சென்னி அம்மா நின்
மொய் பூம் தாமத் தண் துழாய்க்
கடிசேர் கண்ணிப் பெருமானே
என்று என்று ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால் தோளும்
துடி சேர் இடையும் அமைந்தது ஓர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே. (3)
When I languish and weep, crying again and again, “Father with the crowned head, great Lord garlanded with dense flowers and cool tulasī, rich with fragrance,” appear like a cloud filled with pure water—makara earrings fitted to your form, coral mouth, four shoulders, and waist slender as a little drum.
தூ நீர் முகில் போல் தோன்றும் நின்
சுடர் கொள் வடிவும் கனிவாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்து என் சிந்தை நிறைந்தவா
மா நீர் வெள்ளி மலைதன்மேல்
வண் கார் நீல முகில் போல
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய்! சொல்லமாட்டேனே (4)
Your radiant form that resembles a cloud of pure water, your ripe-fruit mouth, and your honeyed lotus eyes came and filled my thought. You recline within the pure ocean like a bountiful dark-blue raincloud lying over a vast silver mountain. Father, I cannot speak it.
சொல்ல மாட்டேன் அடியேன் உன்
துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு
இரண்டுபோல் என் உள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுது உண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே? (5)
Your servant cannot describe how your flashing sacred feet abide within me like twin young suns of boundless glory. Cloud-hued one filled with vast waters, who swallowed the entire mighty earth ringed by oceans—what means can the darkness called suffering have to reach me?
கொண்டல் வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா என்
அண்ட வாணா என்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண்மேல் தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத்தான்
தொண்டனேன் உன் கழல்காண
ஒருநாள் வந்து தோன்றாயே (6)
Cloud-hued one, pot-dancer, Kaṇṇan of deed-burdened me—when I call and summon you to rule me, crying, “Kaṇṇan, Lord of my cosmic realm!” whether from high heaven, upon earth, from the broad-watered ocean, or elsewhere, come and appear one day so that your servant may behold your ankleted feet.
வந்து தோன்றாய் அன்றேல் உன்
வையம் தாய மலர் அடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாய் ஓர் கரு நாயிறு
அந்தம் இல்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே (7)
Come and appear! If not, I shall arrive first and stand beneath your lotus feet that spanned the world; call me before you there and command my service. Master whose cool red lotus eyes, hands, feet, and crimson mouth resemble a dark sun blossoming and spreading rays without end!
ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாள் நாளும்
தொக்க மேகப் பல் குழாங்கள்
காணும்தோறும் தொலைவன் நான்
தக்க ஐவர் தமக்காய் அன்று
ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்
புக்க நல்தேர்த் தனிப்பாகா
வாராய் இதுவோ பொருத்தமே? (8)
“This resembles my Master’s form.” Day after day my heart dissolves, and whenever I see mass upon mass of gathered clouds, I lose myself. For the worthy five you once entered the fine chariot as peerless driver and made the hundred twice-fifty fall at your feet. Come—can this delay be fitting?
இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்
படையாய் ஏறும் இரும் சிறைப்புள்
அதுவே கொடியா உயர்த்தானே
என்று என்று ஏங்கி அழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மது வார் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே? (9)
Can this be fitting? “Bearer of the flashing discus-weapon, rider of the great-winged bird whom you raise as your own banner!” When I languish and weep with these cries, what can you be thinking? Mysterious one born in northern Mathurā, amid groves overflowing with honey, to relieve the burden of this great world!
பிறந்த மாயா பாரதம்
பொருத மாயா நீ இன்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண்
பிறவும் ஆய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெரு மாயா
உன்னை எங்கே காண்கேனே? (10)
Born mysterious one, mystery who fought the Bhārata war—you now become excellent wind, fire, water, sky, earth, and all besides. Great mystery who may be discerned everywhere within these like ghee hidden in drawn milk, yet stands transcending them—where can I behold you?
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான்? என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே. (11)
“Where shall I behold the Master of fresh tulasī?” With such deeply humbled words, Caṭakōpa of beautiful, cool Kurukūr spoke these ten within his richly musical thousand. Those who master them will behold him here and rejoice in this very birth, by night and morning.