என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ? (1)
From that day onward he took me toward salvation forever; day after day he made me his own and, through me, sang himself in sweet Tamil. What can I say as I stand before the Lord who is my primordial and abiding Light?
என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே? (2)
What shall I say, now that he and my sweet life have become one? Making me call it “the lovely poem I spoke in my words,” the mysterious Lord praised himself through his own words. He precedes every word I utter, the primal one of three forms.
ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ? (3)
Declaring within himself, “This one shall be the first,” he entered me beginning with my tongue. Through my mouth he spoke himself in noble, sweet poetry for his pure and foremost devotees. How could I ever forget the Father who became the source of my speech?
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றி தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீவினையேனை உய்யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? (4)
How could I ever forget the Father who became myself? Without the slightest fault, he himself uttered poetry about himself, took peerlessly deed-burdened me toward salvation, and wanders about making me truthful and complete. See the glory of it!
சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன்கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே (5)
Seeing what was needed, the supreme Lord knew that I had no capacity to speak fine, fitting, and sweet verse directly. He made unworthy me his own and, through me, sang himself in lovely poetry praised throughout the earth.
இன் கவி பாடும் பரம் கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே (6)
Without arranging for himself to be sung in his own poetry by great poets who sing delightful verse, he graciously came today, made himself one with me, and through me sang himself in powerful poetry—my Lord of Vaikuṇṭha.
வைகுந்த நாதன் என வல்வினை மாய்ந்து அறச்
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை
வைகுந்தன் ஆகப் புகழ வண் தீம் கவி
செய் குந்தன் தன்னை எந் நாள் சிந்தித்து ஆர்வனோ? (7)
Calling himself “Lord of Vaikuṇṭha,” he erased my fierce deeds completely; making himself into me and himself through me, he composed generous, sweet verse so that I might praise him as Vaikuṇṭha’s Lord. On what day could I contemplate him enough to be satisfied?
ஆர்வனோ ஆழி அங்கை எம் பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைச்
சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கே? (8)
Could I ever be satisfied with the way our discus-handed Lord made unworthy me his own and, through me, spoke sweet poetry in which he gained glory—even if I blended together all earth, heaven, and water and drank his fame entire?
திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர்
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ
மறப்பு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே? (9)
Could I ever be satisfied, even drinking through past, present, and future the glory of Tirumāl—the nourishment perfectly suited to one’s capacity—in return for his help? He made me, never forgetful, his own and through me spoke many sweet poems so that he might abide firmly.
உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே (10)
If I carefully considered offering my life in return for his help, that too already belongs to him. For the Father who, through me, sang the sweet poetry that established him in his station, there is absolutely nothing I can do—either here or there.
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்தும்
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே (11)
Seeing that nothing exists here or there apart from Tirumāl, Caṭakōpa of bountiful Kurukūr spoke his thousand in precisely that truth. However anyone recites these ten within it, they will yield delight.