மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் கால் ஆய்
தாய் ஆய் தந்தை ஆய் மக்கள் ஆய் மற்றும் ஆய் முற்றும் ஆய்
நீ ஆய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே (1)
Mysterious Vāmana, Madhusūdana, grant your grace! You become fire, water, earth, sky, and wind; mother, father, children, every other relation, and the whole of all things. Yet you are yourself and stand as yourself—what law can explain this?
அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய்
திங்களும் ஞாயிறும் ஆய் செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்
பொங்கு பொழி மழை ஆய் புகழ் ஆய் பழி ஆய் பின்னும் நீ
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் இவை என்ன விசித்திரமே (2)
Acyuta crowned with cool tulasī and lovely flowers opening their honey, grant your grace! You become moon and sun, the many abundant lights and darkness, the swelling rain that pours down, fame and blame—and then the fierce-eyed, terrible death. What a wonder this is!
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய்
எத்தனை ஓர் உகமும் அவை ஆய் அவற்றுள் இயலும்
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே (3)
Master of the decorated chariot, bearer of the sacred discus, grant your grace! You become all the innumerable ages and the endless, harmonious, radiant things active within them—both identity and difference. You stand as their ingenious principle. What distinctions are these?
கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதும் ஆய் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வெள்ளத் தடம் கடலுள் விட நாகு அணைமேல் மருவி
உள்ளப் பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே (4)
Kaṇṇan whose lotus eyes unfold with honey, grant me one grace! You become what exists and what does not, endless multiplicity and difference, yet recline upon the venomous serpent-bed in the broad ocean’s flood and perform many inward yogas. What means are these?
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
காயமும் சீவனும் ஆய் கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே (5)
Remove my bonds and take me wholly for yourself alone. Mysterious one crowned with cool tulasī and fragrant flowers, grant your grace! You become body and living self, death and birth, and then establish all through the wonders you perform. What bewilderments are these?
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய் அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்
வியப்பு ஆய் வென்றிகள் ஆய் வினை ஆய் பயன் ஆய் பின்னும் நீ
துயக்கு ஆய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே (6)
Bewildering Vāmana, grant one thing so that understanding may arise! You become weariness and certainty, flame and cold, difference and wonder, victories, deeds and their fruits—and then confusion itself. Standing so, what sorrows are these?
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
துயரம் செய் மானங்கள் ஆய் மதன் ஆகி உகவைகள் ஆய்
துயரம் செய் காமங்கள் ஆய் துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே (7)
Kaṇṇan who causes sorrow, long radiant crown, grant your grace! You become the pride that brings pain, Love himself and its delights, desires that bring pain, decline, endurance, and every course of movement. You establish us within these sorrows—what stratagems are these?
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா?
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை
முன்னிய மூவுலகும் அவை ஆய் அவற்றைப் படைத்து
பின்னும் உள்ளாய் புறத்தாய்! இவை என்ன இயற்கைகளே (8)
By what stratagems have you taken your stand, Kaṇṇan who rules me? No one can determine of you, “His nature is precisely this.” You become the three primordial worlds, fashion them, and then remain within and without. What modes of nature are these?
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?
துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே (9)
Through what natures, and in what manner, do you stand, my Kaṇṇan? Every closely joined limb, beginning with hands and feet, and all that thought encounters—taste, sight, touch, sound, and scent—are you. If one attempts to know you, the subtleties have no end.
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம்
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே (10)
There are no subtleties by which one may say, “This is other than him.” You are both form and formlessness spoken in the ancient, noble scriptures. My Acyuta, chest adorned with garlands of lotus and tulasī, whatever description can possibly be uttered—that too becomes a description of you.
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே (11)
The Lord’s exact mode is difficult to know. Caṭakōpa of Kurukūr understood and spoke of him according to the mode that may be known. Those who recite in that spirit these ten among his thousand luminous Tamil verses, composed in that same mode, will remain perfectly established forever.