பா மரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ
பா மரு மூவுலகும் அளந்த பற்ப பாதா ஓ
தாமரைக் கண்ணா ஓ தனியேன் தனி ஆளா ஓ
தாமரைக் கையா ஓ உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)
O lotus-naveled one who fashioned the three worlds celebrated in song! O lotus-footed one who measured those three song-filled worlds! Lotus-eyed Kaṇṇan, sole ruler of solitary me, lotus-handed one—when will I join you?
என்றுகொல் சேர்வது அந்தோ! அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப்பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண் உயிர்
என்று இவை தாம் முதலா முற்றும் ஆய் நின்ற எந்தாய் ஓ
குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ! (2)
Alas, when will I reach your red sacred feet praised by Hara and four-faced Brahmā? My Father, you stand as earth, water, fire, wind, sky, life, and everything beginning with these. Our dancer, you lifted the mountain, grazed the cattle, and guarded them!
காத்த எம் கூத்தா ஓ! மலை ஏந்திக் கல் மாரி தன்னை
பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே வந்து என் ஆர் உயிர் நீ ஆனால்
ஏத்து அரும் கீர்த்தியினாய்! உன்னை எங்குத் தலைப்பெய்வனே? (3)
Our protecting dancer, you raised the mountain against the stone-storm! Cool flowering tulasī crowns you; you are the red-matted one adorned with lovely koṉṟai; you are my fitting four-faced Lord. If you come and become my insatiable life, O one of fame beyond praise, where will I meet you?
எங்குத் தலைப்பெய்வன் நான் எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெம் கதிர் வச்சிரக் கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ;
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைக் கோவலனே? (4)
Where can I go to meet you? You are the three beautiful worlds; you are the exalted three-eyed Lord and the great Brahmā there. You are Indra of the fierce-rayed thunderbolt and every other god. You are my cowherd, crowned with cool, lovely tulasī blossoms overflowing with honey.
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கருமாணிக்கமே
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனேகொல் வந்து எய்துவரே? (5)
My own cowherd, my beautiful dark sapphire! From the flower of your navel the three worlds spread. Beholding you deep within the flood of your own radiance, how can my precious life ever come and reach you?
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்ப
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திருமார்பனையே (6)
I do not know the way to reach you. Abundant sapphire radiance branches outward; crimson flames blossom, like a ruby joining it. Above, against red silk, feet, navel, hands, chest, eyes, and mouth pour out red, radiant light—my Lord whose chest is the sacred Lady’s dwelling.
என் திருமார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நாமகளை அகம்பால் கொண்ட நான்முகனை
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ? (7)
Will I not behold the sovereign—my Lord with Śrī upon his chest; the one whose half belongs to my mountain-born Lady; four-faced Brahmā who holds my Lady of Speech within; the abiding Lord of Śacī; he who split the earth, burned the three forts, conquered and drove away the senses, and rules the sky?
ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப
மீளி அம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும்
ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டும்கொலோ? (8)
As horses flee a yāḷi and foxes a lion, the rākṣasas howled, crossed Laṅkā, entered caves, and hid. Driving his unconquerable, beautiful bird, he killed mighty Māli, then raised heaps of the fallen like towering mountains and crushed them. Will I ever behold him?
காண்டும்கொலோ நெஞ்சமே! கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரியேற்றினையே? (9)
Heart, will we behold the lion among immortals? He cut down the rākṣasa clan—warriors of virile might and swelling strength, intent upon cruel deeds—then graciously gave ocean-spread Laṅkā to the enemy’s own brother, ruled, and entered his radiant abode.
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி
கூற்று இயல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்கு ஆய் கொடும் சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே (10)
For our sake he will grant Vaikuṇṭha, so difficult to attain. He entered the cowherd clan as its youngest little child and performed wonders; killed Kaṃsa, whose nature was death; and for the five destroyed the cruel army. Supremely powerful, he is the rare one who entered the great transcendent Light.
புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே (11)
The wealthy discus-bearer entered the lion-form, tore the asura’s body, and rejoiced. Upon him Caṭakōpa of Kurukūr spoke a surpassing thousand. Around those who master these ten, lovely women will gather, sing blessings of many years, and wave ceremonial fans.