ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே (1)
The discus rose, the conch and bow rose, benedictions rose through every direction, mace and sword rose, the cosmic shell resounded, crown and foot rose, and the age itself rose—such was the way our Father took possession of the world.
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2)
Rivers thundered as they rushed against the mountain; the serpent hissed and strained, grinding against its slopes; the ocean roared, wheeling in resistance and calling out—such was the day our Father churned it to foam and took the nectar.
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3)
The seven earths hung secure in their own stations; behind them the seven mountains hung in theirs, and behind those the seven seas hung in their own places—on the day our Father braced himself, plunged below, and bore the earth upon his tusk.
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4)
Time rose; land and water rose; sky and planets rose; fire and wind rose; mountains and their roots rose; the lights themselves rose—such was the food our Father ate when the world rose into dissolution.
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5)
There was the crash of well-fed wrestlers shattering, the cry of mighty royal armies trembling, and the clamor of exalted gods appearing in heaven—when our Father struck his hand upon the manifest field of Bhārata.
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6)
At that hour the sky’s quarters were encircled by a fading, baleful crimson; blood rose like a flood, and he resembled a lion bursting from a mountain split beneath it—such was our Father’s killing of the asura in fathomless agony.
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலைபோல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே (7)
Flight after flight of opposing arrows filled the air with their hiss; a hundred corpses rolled like mountains, and streams dammed into an ocean of blood—when our Father destroyed Laṅkā and reduced it to ash.
நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8)
First the bearer of the rooster-banner fell before him; behind him the fiery god of flame fell; then, behold, the three-eyed form also gave way—on the day our Father directly met Bāṇa and took his mighty arms.
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே (9)
In the beginning our Father made earth, water, fire, wind, sky, and mountains; then the two great lights and all else; then rain, living beings, gods, and everything besides. From that beginning he fashioned the world.
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10)
Grazing herds rushed underneath, great beasts tumbled, and the mouths of springs roared and poured out their swelling waters; every herd crowded together there in safety—when our Father lifted the mountain and guarded them from the murderous rain.
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே (11)
Caṭakōpa stood united with the servants of the Lord who lifted the mountain and fashioned an excellent work of a thousand utterances. These ten within it confer victory upon those who lovingly learn them.