உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை
உன் பாதபங்கயம்
நண்ணிலாவகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்
எண் இலாப் பெறு மாயனே இமையோர்கள்
ஏத்தும் உலகம் மூன்று உடை
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே (1)
You still intend to crush me beneath the five who dwell within, afflicting me so that I cannot draw near your lotus feet. O immeasurably great mystery, Master of the three worlds praised by the immortals, nectar, Father, sovereign of me!
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து
இராப்பகல் மோதுவித்திட்டு
உன்னை நான் அணுகாவகை செய்து போதிகண்டாய்
கன்னலே அமுதே கார் முகில் வண்ணனே
கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே (2)
You installed these five harsh tyrants to rule me, setting them to assail me night and day, and thus keep me from approaching you—see what you do! Sugarcane-sweet nectar, dark raincloud-hued one, bearer of the flashing discus that guards the ocean-bound earth, Vedic Lord of deed-burdened me!
வேதியாநிற்கும் ஐவரால் வினையேனை
மோதுவித்து உன் திருவடிச்
சாதியாவகை நீ தடுத்து என் பெறுதி? அந்தோ!
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு
உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே (3)
What do you gain by letting the five pose as priests, battering sinful me and barring me from attaining your sacred feet? Alas! Primal one who fashioned the broad expanse, swallowed and released it, crossed and lifted it; radiant, lofty-crowned Madhusūdana, whose servant I am!
சூது நான் அறியாவகை சுழற்றி ஓர் ஐவரைக்
காட்டி உன் அடிப்
போது நான் அணுகாவகை செய்து போதிகண்டாய்
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி
ஓர் ஆலின் நீள் இலை
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே (4)
Without letting me perceive the deceit, you set the five before me and whirl me round, preventing me from reaching your flower-feet. When nothing and no one remained, you drew all within yourself and lay as an infant upon a long banyan leaf. Medicine that ends the deeds of deed-burdened me!
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டுத்
திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி
அசுரர் வன் குலம்
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே? ஓ (5)
Without a curing medicine, the five turn me within the crushing mill of fivefold disease. You seem to shut them tightly against one side and then release them. Who now can become my medicine? You severed the mighty asura clans at the root with the battle-discus in hand, Lord of those in heaven!
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும்
செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய்
பரமீசனே வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஒன்று சொல்லாயே (6)
These five senses attack even those who serve the Lord of heaven. If they possess me here on earth, what will they not do when you too abandon me? You dwell in melody, within poetry, and within devotion. Supreme Lord, come—be in my eyes, my heart, and my words; speak one word.
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல்
அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே (7)
The five fierce rogues say one thing and never remain fixed upon any single course. How could I ever conquer them without your sacred grace? Father who once placed a mountain and serpent within the surging sea while gods and asuras pulled, sweet nectar drunk by cruel me!
இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும்
மயக்க நீ வைத்த
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக்
கைதொழவே அருள் எனக்கு
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே (8)
You set the five before me as though they were sweet nectar, bewildering everyone. Cut their ancient deception away down to its deepest root, and grant me grace to contemplate and praise your emblems and sacred form with folded hands. My Mother, my Kaṇṇan, first source of the heavenly race!
குலம் முதல் அடும் தீவினைக் கொடு வன் குழியினில்
வீழ்க்கும் ஐவரை
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்தருள்கண்டாய்
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் நிற்பன
செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே (9)
The five drag one into a fierce pit of cruel deeds that destroys a lineage at its root. Graciously grant the boon that ruins their power from its foundation. You created the earth and every world—all things that stand, move, and possess their many principles. My Kaṇṇan, my supreme Light!
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி
உன் இணைத் தாமரைகட்கு
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை
வலித்து எற்றுகின்றனர்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ (10)
I cry, “My supreme Light!” and stand melting in love for your paired lotus feet; even as that continues, you have laid this burden upon me. Taking up heavy missiles, the five pull and strike from every direction. O form that churned the primeval ocean and obtained its nectar!
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து
அளித்து கெடுக்கும் அப்
புண்டரீகக் கொப்பூழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்
சடகோபன் சொல் ஆயிரத்துள் இப் பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே (11)
The Lord upon the waters, from whose lotus navel the flower rises, assumes three forms and, through their qualities, creates, preserves, and dissolves. Caṭakōpa—servant of the servants of the servants of his servants—spoke these ten within his thousand. Whoever learns and sings them will see deeds depart by night and day.