உலகம் உண்ட பெருவாயா
உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்கு ஆய் நின்ற
திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம்
கூடும் ஆறு கூறாயே (1)
Great-mouthed one who swallowed the world, Master of limitless fame, towering form of light encircled by the moon and sun, very life of your servant! Our Lord of sacred Veṅkaṭam, standing as the world’s tilaka, tell me how I—your servant from an ancient lineage of service—may reach your feet.
கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகி
கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திரு நேமி
வலவா தெய்வக் கோமானே
சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ
மலரும் திருவேங்கடத்தானே
ஆறா அன்பில் அடியேன் உன்
அடிசேர் வண்ணம் அருளாயே (2)
O sovereign Lord of the gods, your sacred discus blazes in wrath and reduces every clan of cruel, powerful asuras to fragments, ash, and earth. Lord of sacred Veṅkaṭam, where lotuses bloom like crimson fire from muddy springs, grant that your servant, filled with unappeased love, may reach your feet.
வண்ணம் மருள் கொள் அணி மேக
வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து
அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர
அடியேற்கு ஆஆ என்னாயே (3)
Beautiful cloud-hued one whose color overwhelms the mind, mysterious Master, nectar entering thought and growing ever sweeter, sovereign of the deathless gods! Lord of sacred Veṅkaṭam, where clear, noble waterfalls toss up gems, gold, and pearls—Master, say “Ah!” in mercy, so your servant may reach your feet.
ஆஆ என்னாது உலகத்தை
அலைக்கும் அசுரர் வாழ் நாள்மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த
சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
பூ ஆர் கழல்கள் அருவினையேன்
பொருந்துமாறு புணராயே (4)
O archer, you did not cry “Alas!” for the lives of asuras who harried the world, but rained upon them fiery-mouthed arrows. Husband of the great sacred Lady! Lord of Veṅkaṭam, beloved of gods, asuras, and hosts of sages, unite deed-burdened me with your flower-filled ankleted feet.
புணரா நின்ற மரம் ஏழ் அன்று
எய்த ஒரு வில் வலவா ஓ
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்
நடுவே போன முதல்வா ஓ
திணர் ஆர் மேகம் எனக் களிறு
சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்
சேர்வது அடியேன் எந்நாளே? (5)
O mighty bowman who once pierced seven trees standing joined together with a single shaft! Primal one who passed between the two trees that stood close together! Lord of sacred Veṅkaṭam, where powerful elephants gather like masses of cloud, when will your servant reach your feet, O bearer of the strong Śārṅga bow?
எந்நாளே நாம் மண் அளந்த
இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள்
ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு
செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ந் நான் எய்தி எந் நாள் உன்
அடிக்கண் அடியேன் மேவுவதே? (6)
“When will we behold the paired lotuses that measured the earth?” Asking this always, the immortals stand in company after company, praising and bowing, worshiping with true body, tongue, and mind in sacred Veṅkaṭam. On what true, auspicious day will I, your servant, attain and abide at your feet?
அடியேன் மேவி அமர்கின்ற
அமுதே இமையோர் அதிபதியே
கொடியா அடு புள் உடையானே
கோலக் கனிவாய்ப் பெருமானே
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே
திருவேங்கடத்து எம் பெருமானே
நொடி ஆர் பொழுதும் உன பாதம்
காண நோலாது ஆற்றேனே (7)
Nectar in whom your servant longs to settle and remain, sovereign of the immortals, possessor of the fierce eagle banner, great Lord with lovely fruit-red lips, medicine that cures the dense growth of deeds, our Lord of sacred Veṅkaṭam—I cannot endure even the span of a moment without seeing your feet.
நோலாது ஆற்றேன் உன பாதம்
காண என்று நுண் உணர்வின்
நீல் ஆர் கண்டத்து அம்மானும்
நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ
விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்பால்
வந்தாய் போலே வாராயே (8)
“I cannot wait; I cannot bear not seeing your feet.” So the subtle-knowing Lord of the darkened throat, perfect four-faced Brahmā, Indra, and many fish-eyed women gather desiring you in sacred Veṅkaṭam. Great Māl, you came to your servant and overwhelmed me with love; come again just as you came then.
வந்தாய் போலே வாராதாய்
வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய்
நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப்
பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம்
அகலகில்லேன் இறையுமே (9)
You do not come though you seem to have come; when you seem not to come, you come. Red-lotus-eyed, red-fruit-lipped nectar with four shoulders, my very life! Lord of sacred Veṅkaṭam, where wish-fulfilling jewels scatter light and turn night into day—alas, I cannot leave your feet for even an instant.
அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று
உடையாய் என்னை ஆள்வானே
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. (10)
Chest where the lotus-dwelling Lady abides, saying, “I will not depart for even an instant”; one of incomparable fame, sovereign of the three worlds, ruler of me! Lord of sacred Veṅkaṭam, desired by matchless immortals and hosts of sages, I, your servant with no other refuge, have entered and taken my seat beneath your feet.
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்
வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்
பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
பெரிய வானுள் நிலாவுவரே. (11)
“Enter, sit beneath my feet, my servants, and live!”—thus the peerless great Lord continually bestows his grace. Of the thousand Caṭakōpa of field-rich Kurukūr spoke to bring his work to its crown, these ten belong to sacred Veṅkaṭam. Those who grasp them will cling to his own, sit enthroned, and shine throughout the great heaven.