நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமும் ஆய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே (1)
He is poverty and wealth, hell and heaven, victorious enmity and friendship, poison and nectar—the great Lord diffused through every kind of thing, who has come to rule me. I beheld him in Tiruvinnakar, abode of families flourishing in abundance.
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலும் ஆய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே (2)
He is pleasure experienced and pain, bewilderment and certainty, punishment and tenderness, flame and shade. The great Lord, so difficult to comprehend, has made me his own; his dwelling is fair Tiruvinnakar, encircled by clear, wave-filled waters.
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே (3)
He is cities and countries, knowledge and delusion, the peerless all-pervading radiance and the darkness, the earth and the sky. The Lord has entered Tiruvinnakar, surrounded by mansions with lofty towers. For anyone, there is no merit apart from his resounding fame.
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்
எண்ணம் ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொள்மின்கள் கைதவமே? (4)
He is merit and sin, union and separation, thought and forgetfulness, reality and nonbeing—and he is beyond them all. Recognize the sweet grace of Kaṇṇan, the Lord who has entered Tiruvinnakar ringed by solid mansions. Could this be deception?
கைதவம் செம்மை கருமை வெளுமையும் ஆய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையும் ஆய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே (5)
He is crookedness and rectitude, blackness and whiteness, truth and falsehood, youth and age, novelty and antiquity. The Lord has entered Tiruvinnakar, enclosed by fashioned, massive walls. Behold the shelter he pours forth: the three worlds possess the Great God.
மூவுலகங்களும் ஆய் அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்
பூவில் வாழ் மகள் ஆய் தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே (6)
He is the three worlds and is not confined to them; delight and wrath, the lotus-dwelling Lady and her inauspicious elder, praise and blame. The Lord whom the gods approach and worship at Tiruvinnakar is the supreme Light dwelling within the heart of sinful me.
பரம் சுடர் உடம்பு ஆய் அழுக்குப் பதித்த உடம்பு ஆய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே (7)
He becomes a body of transcendent light and a body marked by impurity; he hides, appears, abides, and performs bewildering acts. The celestials bow their heads to the Lord of Tiruvinnakar. For anyone there is no strong refuge except his boon-bearing feet.
வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே (8)
He is a mighty refuge for the gods and a fierce death to the asuras; he places the worlds beneath the shade of his own refuge—and also does not. The Lord who has entered southern Tiruvinnakar is my refuge, my Kaṇṇan, my sovereign, and my Father.
என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே (9)
He became my father, my intimate companion, and the mother who bore me—my golden father, my jewel-father, my pearl-father, and my loving father. The matchless Father of Tiruvinnakar, encircled by walls that flash like gold, granted me the shade beneath his own feet.
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே (10)
He is shade and burning sun, littleness and greatness, shortness and height; all that moves, all that stands, all the rest—and none of these. We have no other protector than the ankleted feet of the enduring Lord of Tiruvinnakar, where baby-voiced bees dwell. See this for yourselves.
காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே (11)
He raised his paired feet before their very eyes as if to say, “People of the world, behold!” Upon him Caṭakōpa of Kurukūr spoke an authoritative thousand. Those who master these ten on Tiruvinnakar will forever be flawless preceptors even to the dwellers of heaven.