வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான் தன்னை
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே? (1)
Enthroned, he rules seven worlds beneath one scepter with deathless glory and surpassing might—the Lord who split the fierce horse. Crying only “Praise!”, hands joined in complete worship, I have offered garlands of words. What lack can remain through seven births?
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்
செய்ய கோலத் தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே (2)
The kohl-eyed Lady dwelling on the lotus inhabits his chest; he is the broad red-eyed Lord of beautiful form, sovereign of heaven. I gained the grace to hold him within by praising with dense musical word-garlands, so every fierce illness may perish from the wide world.
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே (3)
Our Acyuta has arrived at the boundless limit where inexhaustible bliss abounds; deathless in glory, lotus-eyed, Lord of heaven. Through time without end I gained his presence by praising with musical garlands; united with me, he reached the limitless extreme of abundant, undying bliss.
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே (4)
The Lord willingly approaches so that the karma of those who stand near and worship may leave; he owns the lovely pure-feathered bird and the conquering discus. I gained nearness by praising with tongue-fashioned musical garlands. I do not know what my soul—life of my life—has accomplished.
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே (5)
The mothering Lord shows the wholly good way; he is bull among the immortals and our Master who unfolded every meaning. Weaving and praising him with garlands of utterance, I gained daily joy, while karmic diseases burned away swifter than the wind.
கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே (6)
The Lord of heaven has a dark body marked with a little white sacred ash, a great and lovely form, broad eyes. Having received him within by praising with fitting word-garlands, can anything be difficult for me from this day onward, forever?
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தன்னை
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே? (7)
Forever one and without equal or superior, he stands as owner of every world, our Lord who sheltered the rain beneath a single mountain. We have attained the destiny of adorning him well with word-garlands—what lack can we have?
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானை சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே? (8)
He is delight for us and the lotus Lady, Lord of earth’s people and those in heaven, Master whose feet bear cool lotuses. Having the ability to arrange and speak garlands of words for him, who in the broad heavens can now equal me?
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை
கூனல் சங்கத் தடக்கையவனை குடம் ஆடியை
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டே? (9)
He stands without absence in heaven, among those beyond heaven, on earth, below the earth, and throughout all eight directions; broad-handed bearer of the curved conch, pot-dancer, king of heaven. For one able to speak poetry of him, can any opposition remain?
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே (10)
Swallowing and releasing, striding and raising, reclining and standing; enthroned in accepted forms, joining in marriage—by every mode seen, he stands declaring the world his own. I have won the grace to weave rich Tamil, a rain of delight for his servants.
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே 11
Kāri Māraṉ Śaṭhakopa of Kurukūr, enclosed by ever-watered fresh-flowered groves, sang this decad within his thousand on the Lord of cool Vēṅkaṭa hill where rain never fails. It ends the karma of the Lady seated upon an unfading fragrant flower.