பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கயக் கண்ணனை
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை ஆளும் பரமரே (1)
The Supreme has an abiding form of radiant light and lotus eyes; he is sweet to contemplate and rests upon our Milk Ocean. See: whoever possesses the Śrī of constant devotion to him is my supreme Lord, ruling me through every birth in which I dwell.
ஆளும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
தோளும் ஓர் நான்கு உடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
தாளும் தடக் கையும் கூப்பிப் பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை நாதரே (2)
Kṛṣṇa is the ruling Supreme, Lord of the discus—our pure sapphire-hued Master with four shoulders. See: those who join broad hands, bow, and worship his feet are my owning masters, ruling me each day through every birth.
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடையார்களே (3)
Our Father is the fragrant tulasī flower praised by earth and heaven, the Master of the tall golden discus. See: those who bow to people capable of worshipping his feet own and rule me through every birth the scriptures proclaim.
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திருநாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடை ஆர் பிறப்பிடைதோறு எமக்கு எம் பெருமக்களே (4)
He wears abundant garments, neck ornament, waist-cord, encircling golden thread, golden crown, and many jewels. See: the servants of the servants of sacred Nārāyaṇa of the noble gait are my great lords through every intervening birth.
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே (5)
He is Lord of the great-hearted and Father who once removed the immortals’ distress by feeding them perfect nectar. See: those who babble praise of people able to babble his greatness are our protecting lords in the coming world and this one.
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
துளிக்கும் நறும் கண்ணித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே (6)
Kṛṣṇa is the gracious Supreme, Lord of the discus—our pure sapphire-hued Father with fragrant, honey-dripping wreath, the Radiance clothed in light. See: those who hold him in the heart will tirelessly rule and protect us through birth after birth.
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டுபோய்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே (7)
Our Father protects his servants through birth after birth, leads them away, restores their true nature, and receives them beneath his paired feet. See: those who praise people able to babble his ancient glory are our trusted ones, bringing us goodness and saving our days.
நம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம் தாங்களே (8)
He is the trusted Lord who created the world and bears Śrī upon his chest, unknowable even to anyone in the heavenly realm. See: even if people in the pit of hell praise him, they are the lineage we worship through all our many births.
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே (9)
Even if they have fallen below the four sustaining social orders, even if they are outcastes of outcastes without a trace of esteem—when they inwardly join the Lord of the right-bearing discus, the sapphire-hued One, as his servants, the servants of their servants are my Lords.
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆல் இலை அன்னவசம் செய்யும்
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே (10)
Our Father, assuming the unequalled form of an infant, swallowed the foot-filled earth and rested freely upon a banyan leaf. We are servants of the servants of the servants of the servants of his servants—servants of the servants of their servants.
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே (11)
Śaṭhakopa of southern Kurukūr offered these services to the tall Lord who brought down the proud Hundred and gave grace to the Five. If one learns to the end these ten among his foot-filled thousand concerning the Lord’s servants, birth itself can be brought to an end.