செய்ய தாமரைக் கண்ணன் ஆய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்
செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே (1)
See him: red-lotus-eyed Kṛṣṇa who swallowed seven worlds, became earth, sky, humans, gods, every other thing, and the whole; then, manifest as encompassing luminous knowledge, created them. He became massed Radiance and the single Form who is the Three.
மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானை
தடங் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனை தென் இலங்கை
எரி எழச் செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ (2)
Praise the lotus-eyed Kṛṣṇa: the Form who became the Three and primordial source even of those first three; remover of curses; recliner on the broad ocean; God of gods; bowman who destroyed southern Laṅkā in rising fire; destroyer of sin.
பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனை பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனை குடக் கூத்தனை
அரவம் ஏறி அலை கடல்
அமரும் துயில்கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ (3)
Set your mind to praise without ceasing, by night and bright day, the Supreme praised by heaven, the transcendent Radiance, youthful dancer of the linked kuravai, sapphire-hued pot-dancer, the Master who mounts the serpent and rests in sleep upon the wave-tossed ocean.
வைம்மின் நும் மனத்து என்று யான்
உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க
நாள்தொறும் வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும்
சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே (4)
What can people like us say of the wondrous Lord’s glory when I urge, “Keep him in your mind”? Leave that aside: every day the ruler of the celestials, four-faced Brahmā, and the great matted-haired Lord sincerely contemplate his lotus feet, praise them, and wander in worship.
திரியும் காற்றோடு அகல் விசும்பு
திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்
மற்றும் மற்றும் முற்றும் ஆய்
கரிய மேனியன் செய்ய தாமரைக்
கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங் குஞ்சி எங்கள்
சுடர் முடி அண்ணல் தோற்றமே (5)
He became moving wind, vast sky, solid earth, surrounding ocean, burning fire, the two lights, gods, every other thing, and all. Dark-bodied, red-lotus-eyed Kṛṣṇa is heaven’s Lord: our Master with clustered black curls and radiant crown.
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்
அவன் ஒரு மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்
கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்
ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை
யான் இலேன் எழுமைக்குமே (6)
He has neither arising nor destruction, yet owns all that does; as one Form, red-eyed Māl entered in wrath so that the recipient of his grace might shelter beneath his feet. He stands as smell, form, taste, sound, and touch—bull among our celestials. Through seven births I have no other.
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்
அமுதத்தினை எனது ஆர் உயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
வண்ணனை குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் கன்னல் கனியினை
தொழுமின் தூய மனத்தர் ஆய்
இறையும் நில்லா துயரங்களே (7)
With pure mind worship him: sweet nectar to my soul through seven births, my precious life, embracing ray-radiance, sapphire-hued pot-dancer, the sugarcane-fruit swallowed in delight by exalted immortals and sages. Sorrows will not remain even an instant.
துயரமே தரு துன்ப இன்ப
வினைகள் ஆய் அவை அல்லன் ஆய்
உயர நின்றது ஓர் சோதி ஆய் உலகு
ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு
நஞ்சினை அச்சுதன் தன்னை
தயரதற்கு மகன் தன்னை அன்றி
மற்று இலேன் தஞ்சமாகவே (8)
He becomes karmas of pleasure and pain that yield only grief, yet is other than them; the exalted Radiance swallowed and released seven worlds. He is deadly poison to Yama’s servants who seize the exhausted, Acyuta, son of Daśaratha. I have no other refuge.
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு
தானும் ஆய் அவை அல்லன் ஆய்
எஞ்சல் இல் அமரர் குலமுதல்
மூவர் தம்முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்
அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன்
ஆகும் நீள் கடல் வண்ணனே (9)
He is refuge, father, mother, and self—yet is other than these; the beginning within the Three, primordial source of the deathless host. People of this sea-bound world, do not fearfully debate, “He is this one, he is that.” The ocean-hued Lord becomes whatever the heart conceives.
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்
கருமாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக்கிடந்த
பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அட வரும் படை மங்க ஐவர்கட்கு
ஆகி வெம் சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல்
காண்பது என்றுகொல் கண்களே (10)
Ocean-hued Kṛṣṇa, black jewel of heaven’s gods, my dear life, Supreme Radiance reclining upon the patterned serpent—when the Five faced the army of the Hundred, he drove their chariot through the fierce battle. Eyes, when will you see our Lord’s resounding ankleted feet?
கண்கள் காண்டற்கு அரியன்
ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
அருள் செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன்
குருகைக்கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால்
பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே (11)
Śaṭhakopa, lord of Kurukūr in the Pāṇḍya country of musical groves, sang this decad within a melodious thousand for heaven’s Lord, difficult for eyes to see yet easy for thought, who grants grace to every life on earth. Practice it and join the community of devotees.