மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மாம் கருமம் என்? சொல்லீர்
தண் கடல் வட்டத்து உள்ளீரே (1)
Cloud-dark Kṛṣṇa gave grace to the elephant imprisoned by a crocodile in the pond beside dense, flower-filled groves. People of the world encircled by cool ocean, tell me: what use are those who do not sing our Lord, rise, fly, and leap?
தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழல் கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக்கொள்ளப் பாடி
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகில் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே (2)
Tirumāl brought ruin upon the ankleted, hard-footed demons who cut down the people within the cool ocean-circle and ate them as prey. Those who do not sing him in fitting modes, leap, bend, and whirl will be born again upon earth, battered and confused by hard karma.
மலையை எடுத்து கல் மாரி
காத்து பசுநிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினோடு ஆதனம் தட்டத்
தடுகுட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழைக்கின்ற வம்பரே (3)
He lifted the mountain, stopped the stone-hard rain, and preserved the cattle from destruction. Those who do not speak him again and again, beat head and seat in rhythm, and leap wildly at all times are strangers who sink into surging hell and lie there laboring.
வம்பு அவிழ் கோதைபொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம்பவளத் திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடி
கோகு உகட்டுண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்களிடையே? (4)
For the maiden whose braid released fragrance, Śrīdhara of clustered coral-red lips subdued seven mighty bulls. Among holy people, what fruit has the birth of those who do not sing his ancient fame, bow, stamp and dance, shout aloud, and roam?
சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே? (5)
To destroy Kaṃsa who oppressed the holy, the primordial lovely Radiance left that form there and was born here—the source of the Veda. What can humans who do not sing him and leap through every street say before those who have studied and understood?
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னை
தடங் கடல் சேர்ந்த பிரானை
கனியை கரும்பின் இன் சாற்றை
கட்டியை தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே (6)
The birthless, incomparable One took an illusory birth as human and every other form; the Lord rests upon the broad ocean. He is fruit, sweet sugarcane juice, a block of sugar, honey, and nectar. Those who tirelessly praise and dance possess the nature that knows the whole.
நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ்சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய்வாரே? (7)
He granted grace to the Five, ended the unrighteous Hundred, and consumed their earth-filling armies. What can those who merely fatten their flesh and swell their bellies do beside noble souls who dance in remembrance of the Supreme Light, eyes flooding and hearts melting?
வார் புனல் அம் தண் அருவி
வட திருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றி
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே (8)
Our Father dwells at northern sacred Vēṅkaṭam, where lovely cool waterfalls stream. Those who babble his many names, enter town after town or stop outside, and dance as worldly people laugh and call them mad—leaping with growing ardor—will themselves be worshipped by the immortals.
அமரர் தொழப்படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து
அவன் தன்னோடு ஒன்று ஆக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே (9)
Except for those capable of settling him in mind through yoga and courageously uniting with the Lord worshipped by immortals, sovereign of every world, the proper work for everyone is this: rise, dance, and cry out, thinking only of him.
கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னை
திரு மணி வண்ணனை செங்கண்
மாலினை தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே (10)
He is action, the fruit of action, and their cause—the sacred sapphire-hued, red-eyed Māl, Lord of gods. Place him alone within the unified mind; let the heart melt, rise and dance; cast off pride and shame, and babble his names until ignorance ends.
தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை
அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண்
வளங் குருகூர்ச் சடகோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்து
அருவினை நீறு செய்யுமே (11)
Śaṭhakopa of cool, prosperous Kurukūr, encircled by abundant fertile fields, fashioned this decad within a thousand for our Lord Acyuta of complete fame, sovereign of immortals, who corrects liberated servants and receives their service. It reduces difficult karma to ash.