முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச் சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே (1)
Did the radiance of your crown blossom from the radiance of your face? Did the light of your feet flower as the lotus on which you stand? Did the luster of your form mingle into clothing, many jewels, and fragrant green-gold waist? Tirumāl, tell me truly.
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ (2)
To speak precisely: no lotus equals your eyes, feet, or hands; even refined gold cannot equal the light of your sacred body. Supreme Radiance, the world’s accumulated praises of you mostly reveal themselves as words painted upon grass.
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே (3)
You are the Supreme Radiance, transcending all; after you, no other supreme light exists to be drawn as your likeness. Our Supreme Radiance, who creates the spreading worlds within yourself—Govinda, I cannot speak your nature.
மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே? (4)
Though incapable of holding your flower-like divine form in mind, this great flower-headed world received from you the intelligence for many religions. Yet you set your own mind only upon a garland of flowering tulasī—will the vast world not grieve?
வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்
வருந்தாத ஞானம் ஆய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்
வரும் காலம் நிகழ் காலம் கழி காலம் ஆய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே? (5)
Without painful austerity you are the radiant body of flower and sunbeam, effortless knowledge, limitless, complete in all. Becoming future, present, and past, you preserve the world as one. Where could I reach the end of your glory in speech?
ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் உலகத்து எவ் எவையும்
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே? (6)
Every recitation of those who recite, and everything in every world, is nothing but a fitting expression of your fame. Crowned with fresh field-grown tulasī, chest where the lotus Lady dwells—what words could I use to bless you?
வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே? (7)
So that many might praise you, you first created four-faced Brahmā within yourself and commanded him to fashion the worlds surrounded by deep water. If glorious Hara and the other resplendent gods gather with the immortals to praise you, could their words ever stain your ancient fame?
மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது
மாசூணா ஞானம் ஆய் முழுதும் ஆய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே? (8)
Your radiant body is stainless, neither opening nor closing; you are unblemished knowledge, the whole and the fulfillment of the whole. If heaven’s immaculate, splendid king worships you, could the stainless radiance of your lotus feet ever grow dim?
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே? (9)
Bearing the unconquered sharp-edged discus in your good right hand, you appeared upon the bird to save the elephant who worshipped in love. If you grant yourself in the flower-world to servants armed only with unfailing knowledge, will your blazing splendor be hidden?
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ் உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே? (10)
Flowering Radiance abiding within the four Vedas that are revelation, you duly create all worlds, raise them, swallow and release them, and measure them. Crescent-crowned Hara, four-faced Brahmā, and Indra know you as Lord and praise your enthronement—is that any wonder?
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ் ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே (11)
Śaṭhakopa of broad Kurukūr, home to many of victorious fame, worshipped without confusion and spoke these ten within a thousand to the Vedic Lord of true knowledge—wonder beyond wonder, yet wonderless. They lift one up and cut birth in this world of three sounding seas.