அணைவது அரவு அணைமேல் பூம்பாவை ஆகம்
புணர்வது இருவர் அவர் முதலும் தானே
இணைவன் ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (1)
He reclines on the serpent couch, embracing the flower-born Lady’s body; he himself is source of the other two. Companion of every thing and primordial liberation, he is the raft for those who would swim the ocean of birth.
நீந்தும் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம்
பூந் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த
பூந் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே (2)
Union with my incomparable Lord, crowned with flowering cool tulasī, carries one beyond sorrowful birth and every other grief to liberation without pain. He ended the distress of the elephant in the cool, flower-filled pond.
புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம்
புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி
புணர்த்த திருஆகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே (3)
He becomes Ayan who creates and Hara who destroys, establishing them at his navel and upon his body. Becoming Śrī, he joins her to his own chest. This great union-making Lord is manifest everywhere.
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஒவாதே (4)
Withdraw from the five sense-objects and the five organs that roam among them, you who would enter the endless country of goodness. Without ceasing, immerse yourselves in the foremost glory of him who destroyed the demons and made them fall in turmoil.
ஓவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மா ஆகி ஆமை ஆய் மீன் ஆகி மானிடம் ஆம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே (5)
The ageless, incomparable First One protects the three worlds from unending sorrowful birth and every other affliction. Becoming great beast, Tortoise, Fish, and human, the Lord—God of gods—is my holy refuge.
தீர்த்தன் உலகு அளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே? (6)
Arjuna joined flower garlands to Hara’s crown, then saw those same garlands upon the red feet of the Pure One who measured the worlds and understood. Can anyone ever finish speaking the greatness of the Lord crowned with fresh tulasī?
கிடந்து இருந்து நின்று அளந்து கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே? (7)
He reclines, sits, stands, and measures; as the Boar he enters below and raises the earth; he hides her inside himself and releases her, then embraces the maiden called Earth with his broad, great shoulders. Who can see the depth of the vast Lord’s love?
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்று எப் பொருட்கும்
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே (8)
Who can see our Lord Kṛṣṇa, and by what means could I see him? Speak of his food: all the worlds are not even a mouthful. Distant liberation, life, and every other thing—he never fails on any side but pervades everywhere.
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே? (9)
His son said, “Kṛṣṇa is everywhere.” Furious Hiraṇya struck the pillar, crying, “Then he is not here!” At that very instant my Lion-Lord appeared and killed him. Who can investigate the majesty of such greatness?
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப் பொருட்கும்
வேர் முதல் ஆய் வித்து ஆய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே (10)
He is the root, first cause, and seed of glorious liberation, heaven, hell, the tender-natured gods between, and every other thing. Pervading all yet standing alone, cloud-dark—this is my Kṛṣṇa whom I have seen.
கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வலார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே (11)
The lord of the fertile Pāṇḍya land, rich in groves loud with bees, sang this decad within his musical Tamil thousand to the dark-bodied Lord with radiant red eyes. Those who master it will sit enthroned and rule in the heavenly realm—our vast liberation.