வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லாத்
திருக்குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறே
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து
அசுரர்க்குத் தீமைகள்
செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. (1)
Vaikuṇṭha Lord, sapphire-hued, my mischievous sacred Dwarf who abides within me as nectar each passing day, bull of heaven—you end the rare afflictions of your servants and bring ruin upon the demons. I have caught you: hold still, firmly now!
சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத்
தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் துளக்கு
அற்று அமுதம் ஆய் எங்கும்
பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே (2)
Leaving not the smallest space outside himself, he swallowed all worlds together, entered, and then entered me. He became an immense flood of knowledge, an unwavering lamp, deathless nectar everywhere. My fresh-lotus-eyed Kṛṣṇa looks to no other side.
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
துழாய் விரைப்
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம்
மகிழ்ந்து ஆட நாவு அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே (3)
Lotus-eyed chief praised by heaven, our Lord garlanded with fragrant tulasī flowers, golden mountain—generously you gave us the condition in which we may approach, praise, contemplate, bow, rejoice and dance, while poems blossom and remain upon the tongue.
வள்ளலே மதுசூதனா என் மரகத மலையே
உனை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்
பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே? (4)
Generous Madhusūdana, my emerald mountain, Father who gave me the grace to melt in remembrance—how could I leave you? I plunged into the flood of your fame, danced, sang, rejoiced again and again, drove out every inward sickness, and survived.
உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை
நாசம் செய்து உனது
அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் பாற்கடல்
யோக நித்திரை
சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே? (5)
I escaped, and you destroyed my measureless, burning evil deeds; I attained service to you without end—could I let go? Father who rests in yogic sleep on the dancing five-hooded serpent in the Milk Ocean, I think of you again and again.
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை
பாடி ஆடி என்
முன்னைத் தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்
மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே? (6)
Thinking of you repeatedly, singing your vast noble words and dancing, I cut my former evil deeds out by the roots. Primordial Man-Lion who tore the broad chest of Hiraṇya when he scorned you in thought—what can now be impossible for me?
முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும்
உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ்
மேல் எழு பிறப்பும்
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே (7)
What indeed can be impossible now? He who swallowed all seven worlds came gladly and entered this servant; he will never depart. Rank diseases fled, and my kin through seven births above and below have turned away forever from dawnless, cruel hell.
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து
உள்ளம் தேறி
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீறு எழ
பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் (8)
Born again and again through many births, I reached your feet, gained clarity of heart, and plunged into twin, shoreless floods of bliss. Enthroned upon the soaring bird, you scattered the clustered demon hosts into ash—Father, do not remove yourself from within me.
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை
செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை
என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே? (9)
Father who stands in cool Tiruvēṅkaṭam, destroyer of Laṅkā, archer whose single shaft passed through seven green-branched marā trees, wearer of clustered cool tulasī, nectar, young Lord, bull of heaven—you blended yourself within me. Where could you go now?
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்
தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே
பரமா தண் வேங்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே (10)
In times approaching, times past, and times still to come, you become mother, father, and life. I have reached you—could I release you? Lord of the three worlds whose ancient fame overflows, Supreme One dwelling in cool Vēṅkaṭam, crowned with fragrant cool tulasī!
கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங்
கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே (11)
Māraṉ Śaṭhakopa of renowned southern Kurukūr drew near and praised broad-lotus-eyed Kṛṣṇa, whose crown bears a wreath of cool tulasī. Those able to sing these ten melodically from his tireless linked thousand are Keśava’s own servants.