திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய்
எண்ணின் மீதியன் எம் பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே (1)
Our Lord is secure liberation, the source of all, and beyond whatever number thought can reach. He is our Kṛṣṇa who swallowed earth and heaven together; apart from his eye, there is no eye by which to see.
ஏ பாவம் பரமே ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரிஏறு அன்றியே? (2)
Alas, what sin! Who but Gopāla, the supreme Man-Lion, could graciously protect all seven worlds and release them from their burden of evil—the One who filled Hara’s begging-bowl and ended his great fault?
ஏறனை பூவனை பூமகள் தன்னை
வேறுஇன்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனின் மிக்கும் ஓர் தேவும் உளதே? (3)
He holds within himself, without division, the bull-rider, the lotus-born, and the lotus Lady whom heaven worships; then he rose beyond them and possessed the earth. Is there any god greater than that vast Lord?
தேவும் எப் பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே? (4)
The Lord created four-faced Brahmā upon the lotus so that gods and every other thing might be made. Apart from our sovereign Lord, to whom could flowers and worship fittingly belong?
தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப் பொருளும் படைக்கத்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் எவரே? (5)
Within himself, the fitting and incomparable First One creates the exalted gods and every thing. Who can know a radiance above our majestic, lotus-eyed Lord of surpassing glory?
எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வு இன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே (6)
Every person, every being, and every thing subsides within him without remainder. That form is a flooding radiance of expansive knowledge—our beautiful Lord of the discus who reclines upon the waters.
பள்ளி ஆல் இலை ஏழ் உலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள் உள் ஆர் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக்கருத்தே? (7)
The generous Lord’s mighty belly holds all seven worlds while he rests upon a banyan leaf. Who can enter deeply enough to know the secret intention of that stealthy, wonder-working mind?
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் பிரான் அன்றி யாரே
திருத்தித் திண் நிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே? (8)
Who but the wondrous Lord brings forth in thought the gods and every thing, establishes the three firm worlds within himself in right order, and preserves them according to his nature?
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே (9)
Kṛṣṇa’s very nature is preservation. Gathering creation within his navel, he brought forth the fitting four-faced Brahmā, Indra, the celestials, and all their divine worlds.
கள்வா எம்மையும் ஏழ் உலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ என்று வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே (10)
The white-bull rider, four-faced Brahmā, Indra, and the celestials bow to the ankleted feet of the bird-mounted Lord and praise: “Thief! Sovereign who manifested us and all seven worlds within yourself!”
ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே (11)
Śaṭhakopa of Kurukūr sang the beautiful Dancer who took possession of all seven worlds. Those able to praise him with these ten from the fitting thousand will suffer no defect.