திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே (1)
The moment I said “sacred Māliruñcōlai hill,” Tirumāl came and entered until my heart was full. The dwelling Tirumāl goes and joins is southern sacred Pēr, south of the Ponni whose waters drive great dark gems along.
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே (2)
The Lord dwelling in Pēr came today, saying, “I will not leave,” and entered until my heart was full. He swallowed seven clouds, seven oceans, seven mountains, and seven worlds, yet his belly was not satisfied; I have caught and confined him there.
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே (3)
I caught him, destroyed birth, and will meet no disease. I folded away the illusion of remaining within household life. See how easy it has become for me to reach the feet of the Lord of sacred Pēr, ringed by mansions and bannered towers.
எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே (4)
Thinking how easy it has become, I rejoice with my eyes; my thought has turned into delight, and I exult. The Lord of sacred Pēr, surrounded by groves where parrots leap, will grant the lucid, exalted heaven.
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே (5)
To grant me heaven, he joined himself to me, entered this flesh-bound hut today, and himself ended the deeds that cause confusion—the Lord of southern sacred Pēr, amid groves flowing with honey.
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே (6)
The Lord of the city sacred Pēr, the Master dwelling upon the sacred Māliruñcōlai mountain, came today saying, “I shall remain,” and entered until my heart was full. Receiving his love, I drank nectar and rejoiced.
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே? (7)
Having drunk and rejoiced, what lack could heaven hold for me? I received words that delight in service and worship him at evening. The Lord of sacred Pēr, ringed by groves where bees rejoice, stands within my eyes for me to behold and enjoy, and never departs.
கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே (8)
He stands within my eyes and does not depart; he is vast within thought, the subtle reality when counted, and the very savor of the seven notes. The Lord of sacred Pēr, surrounded by fine colorful jeweled mansions, entered and filled my heart firmly today.
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்?
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே (9)
Today he made me a treasure and placed himself within me. What did he intend when once he joined me to wandering outside? The Lord of sacred Pēr, ringed by mansions shining like mountains, showed me so that I might understand the single grace he granted me.
உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே (10)
I reached you, joyfully served, and gained your feet. Father, this alone is all I could still desire. Suffering cannot remain with detached servants of the Lord of sacred Pēr, surrounded by learned masters of the Veda.
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே (11)
Suffering does not remain. Upon sacred Pēr, encircled by long fields, Caṭakōpa of Kurukūr, home to many good people, spoke these ten within his word-rich Tamil thousand. Those who master them will rule the servant-filled golden heaven.