பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே (1)
Bearing the long, battle-mighty discus and conch, he became the solitary jewel-like Dwarf, then rose immense while all seven worlds worshipped his long sacred feet. That dark sapphire now dwells within my eye.
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணும் ஆய் விரியும் எம் பிரானையே? (2)
Because he lovingly stands within my eyes, he comes whenever thought turns to him. What more could we desire of our Lord, who unfolds as earth, water, fire, wholesome wind, and sky?
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே (3)
O foolish heart, worship our Lord: master of me, of my father, grandfather, and every forefather; the cool-lotus-eyed One upon whose chest rests the Lady with a waist fine as a tender vine.
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம்? இனி என்ன குறைவினம்?
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய் (4)
Heart, you are good—truly good! Having gained you, what can we not accomplish, what lack remains? Follow the strong young Lord, bridegroom of the lotus Lady, without leaving him even in sleep.
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே (5)
You have seen, O heart, how blessings arrive of themselves, without even being counted as deeds. You too have discovered the One who swallowed seven worlds and, with three strides, took them all.
நீயும் நானும் இந் நேர்நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையும் ஆய் இவ் உலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே (6)
Heart, if you and I remain together in this accord, he will let no further affliction approach. I tell you: the jewel-hued Lord who pervades this world is both mother and father—our own Father.
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம் பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே (7)
“I shall keep him in thought forever as my Father and my Lord,” I, the sinner, declare. For he is the treasure whom heaven’s immortals hold in mind and praise as “our Father, our sovereign Lord.”
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே (8)
The moment I hear the words “prosperous Nārāyaṇa,” tears flood my eyes and I seek him—what wonder is this? The complete Lord gives himself, trusts me, and never releases me, night or radiant day.
நம்பியை தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ? (9)
The complete Lord who stands in southern Kurunkuṭi is pure gold, a resplendent sacred form, the ancient lovely radiance of the heavenly gods. With what words could I describe our Lord—and how could I forget him?
மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணொடு
மறப்பு அற என் உள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே? (10)
I no longer know remembering as one thing and forgetting as another. Fearing that I might forget, the red-lotus-eyed Lord settled permanently within me and abolished forgetfulness. How could I now forget my jewel?
மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே (11)
Śaṭhakopa of southern Kurukūr sang this decad among his thousand acts of service to the Jewel, heaven’s Kṛṣṇa, his own incomparable ornament. Those who learn these ten with unrelenting ardor will attain true learning.