கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்(கு) கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே. (1)
His eyes are red and great, his mouth crimson and ripe; within, white teeth flash, light glitters, and makara earrings cast rays abroad. Cloud-hued, radiant-crowned, four-shouldered, bearing curved Śārṅga, bright conch, mace, sword, and discus—the peerless one dwells within his servant.
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கலாம்
படியன் அல்லன் பரம்பரன்
கடிசேர் நாற்றத்துள் ஆலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஒடியா இன்பப் பெருமையோன்
உணர்வில் உம்பர் ஒருவனே (2)
He is within his servant and within the body; inside the cosmos and outside it. One might say, “His nature is this,” yet his nature is not so: he is the supreme beyond the supreme. He is the essence within fragrant scent, the boundary beyond pleasure and pain, the greatness of unbroken delight—the unequaled one above all within awareness.
உணர்வில் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறற்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்
அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பிலனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி
யானும் தானாய் ஒழிந்தானே. (3)
To reach through his own grace the unequaled one above awareness, I established him within my understanding; that too was only his sweet grace. Understanding, life, body, and all the endless rest are useless. Entering ever deeper so that awareness might arise, he mounted it fully and ended by making me himself.
யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே (4)
I realized the one who ended by making himself and me one; who precedes everything and everyone; who branched forth as himself, Śiva, and Brahmā, yet remains the solitary first cause. Becoming honey, milk, sugarcane, and nectar, he grows sweet and stands within my flesh, life, and awareness.
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே (5)
For me who realized the one abiding reality, no one can determine its subtle truth as “this” or “that”; even when realized, it remains difficult to see beyond. Going farther and farther as the highest beyond, it wears away until nothing remains; hard to know as good or evil, it is good and passes beyond knowledge.
நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்பத் துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே (6)
Passing well beyond knowledge, drawing in every noble sense, it rests as one—the rare, great, measureless openness. Realizing and realizing that, journeying there and killing and clearing away pleasure and pain until all attachment ceases: that very day, that very moment, is release. That alone is release beyond release.
அதுவே வீடு வீடுபேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
யாதும் இலிகள் ஆகிற்கில்
அதுவே வீடு வீடுபேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு? ஏது இன்பம்? என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே (7)
That alone is release and the bliss of attaining release—understand it. If one is attached to nothing whatsoever and becomes possessed of nothing, that is release and the bliss of release. Those who do not understand it ask, “What is release? What is joy?” and grow exhausted, exhausted, exhausted.
எய்த்தார் எய்த்தார் எய்த்தார்
என்று இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம்
போகும்போது உன்மத்தர்போல்
பித்தே ஏறி அநுராகம்
பொழியும்போது எம் பெம்மானோடு
ஒத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல் உறைப்பே (8)
“He has gone, gone, gone!” household and outsiders crowd close, crying out and embracing as one departs. At that moment, if madness rises like divine intoxication, love pours forth, one goes in likeness with our great Lord, and the heart joins him there—that is a good and lasting dwelling.
கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை உயர் கொடி எம்
மாயன் ஆவது அது அதுவே
வீடைப் பண்ணி ஒரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே (9)
If union occurs, it is good abiding; if one attains non-union, the mystery who raises the dancing bird as his high banner remains exactly what he is. Yogins too fashion release in some particular way and run wandering through future, present, and past—are they there, or are they not?
உளரும் இல்லை அல்லராய்
உளராய் இல்லை ஆகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து என்
உள்ளத்துள்ளே உறைகின்றார்
வளரும் பிறையும் தேய் பிறையும்
போல அசைவும் ஆக்கமும்
வளரும் சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே (10)
Neither simply existent nor nonexistent, being and not being, our one Lord comes and dwells inside my heart. Like the waxing and waning moon are decrease and becoming; like growing light and darkness are discernment and delusion. We have destroyed them both.
தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடிக்கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம்
திருமாலால் அருளப் பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இப் பத்தால்
அருளி அடிக்கீழ் இருத்தும் நம்மண்ணல் கருமாணிக்கமே. (11)
The Master—Brahmā, Śiva, and Tirumāl—destroys discernment and delusion and graciously seats us beneath his flawless red-gold ankleted feet. Through these ten among the thousand of Caṭakōpa, graced by Tirumāl, our sovereign dark sapphire graciously establishes us beneath his feet.