அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்
சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே (1)
Here, there, and everywhere, all celestials and dānavas cry out, unable to know you or say, “This is your equal.” Lotus Lady, Earth Lady, and cowherd Lady join your body. “The one whose hands bear conch and discus is our refuge,” they declare.
சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி
அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே (2)
Without depending even upon the four Vedic scriptures that serve as refuge, we erased death, birth, grave disease, and age by becoming servants of the Lord who bears the fortress-strong weapon—the blazing discus that flies until attachment to the many armies of the senses is severed.
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை
தாளும் தோளும் கைகளை ஆரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே (3)
Those who rule will rule; they themselves carry discus and conch, and no one else follows behind with sword and bow. Yet I do not see the one whose feet, shoulders, and hands I might worship to my heart’s fullness. Your servant will seek him day after day throughout the earth.
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன்
கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே (4)
Master, you took the world as your food and, as an infant form not yet grown, performed your wonder upon the great banyan leaf. For vine-slender me, sinking as I long to see your lovely raincloud-dark beauty, the passing time has become the black darkness of an age’s dissolution.
கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளியங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே (5)
You dwell within mansioned Kōḷūr and Puḷiyaṅkuṭi, and even now delight in unbroken sleep. Is this weariness from ending your servants’ distress—or fatigue from rising tall and striding across the worlds? Command an answer.
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்
தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
மணி ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே (6)
He himself is the submission and virtue of immortals who bow. Behold him bearing the beautiful discus and conch! To end the world’s fierce, unrelenting disease, he comes with his sacred sapphire-rich body and surrounds my mind.
வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே? (7)
Those who come and go within the generous retinue where I remained do not tell my condition to my Lord whose chest is Śrī’s dwelling. What can I do? Say to him, “There is one servant here who carries your splendid discus and conch within and wanders in accord with you.”
என்றே என்னை உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்?
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே (8)
Is this, then, what you intend—that you should graciously take me so I may stand beneath your beautiful, perfect feet and serve? O discus-bearing Tirumāl, your lofty ankleted feet stood and strode across seven mountains, seven lands, seven surrounding seas, and all seven worlds.
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்? பேசி என்?
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடைக்
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே (9)
Who can know our Lord’s nature—not even Tirumāl, four-faced Brahmā, or the red-matted one? What use are words? Stirred by love, I can only say: “Unequaled primal one, Lord of the age, sovereign of me, whose body is a vast darkness.”
கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கம் எய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது? உரையீரே? (10)
Sages of noble austerity, free from confusion and arrived at the further shore, and every unwavering immortal worship him. He churned the great ocean until it heaved in turmoil. How can we praise him to the limit? What can we do? Tell me.
உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை
வரை ஆர் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்
உரை ஏய் சொல்தொடை ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
நிரையே வல்லார் நீடு உலகத்துப் பிறவாரே (11)
Upon the long-crowned Lord who graciously ends the fierce disease beyond words, Caṭakōpa of Kurukūr, where mountainlike mansions stand, composed a thousand well-fitted verbal garlands. Those who master these ten in order will not be born again in the enduring world.