மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே (1)
For Māl, the bridegroom who measured the earth—for him who resembles a dense, dark-blue cloud, whose lovely eyes are red lotuses—my daughter, her fragrant hair dressed with honeyed blossoms, has lost her conch-bangles.
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனிவாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே (2)
For him whose hands bear conch, bow, sword, mace, and discus; whose lips are red fruit and whose eyes are crimson lotuses; whose crown wears cool, beautiful tulasī blossoms dripping honey—my young daughter has lost the rich color of her body.
நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட
திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வன் அவற்கு
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே (3)
For the dark-hued one, the little thief whose wondrous mouth swallowed the enduring worlds, the one whose hand holds the loudly whirling discus—my daughter with abundant, shining dark hair has lost her dignity.
பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு
நாடு உடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே (4)
For him who created the glorious four-faced Brahmā, the bridegroom who measured the prosperous earth, the perfect Lord who went as envoy to the kings who held the land—my daughter, with her splendidly fashioned waist, has lost her womanly reserve.
பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண்புனை கோதை இழந்தது கற்பே (5)
For the supreme one from whom the noble Veda arose, the Boar who dug the earth from its earthen depths, our divine Lord who reclines upon the clear waters—my garlanded daughter, precious as my eyes, has lost her guarded constancy.
கற்பகக் கா அன நல் பல தோளற்கு
பொன் சுடர்க் குன்று அன்ன பூந் தண் முடியற்கு
நல் பல தாமரை நாள் மலர்க் கையற்கு என்
வில் புருவக்கொடி தோற்றது மெய்யே (6)
For him whose many noble arms resemble a grove of wish-fulfilling trees, whose cool, flowered crown is a mountain ablaze with gold, whose many gracious hands are fresh-blooming lotuses—my vine-like daughter with bow-shaped brows has truly lost her bodily soundness.
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு
பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு
கையொடு கால் செய்ய கண்ண பிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே (7)
For him whose body is beautifully adorned with many fitted ornaments, who reclines upon the hooded serpent-bed, the Lord Kaṇṇan whose hands, feet, and eyes are red—my young daughter has lost her own complexion and grace.
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே (8)
For the peerless one who snapped the kuruntu tree until it fell, the bridegroom who kicked the phantom cart, the Lord who drank the demoness’s milk and left her a corpse—my fragrant-haired daughter has lost her distinction.
மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே (9)
For our wondrous dwarf of perfectly dignified beauty, the crimson-radiant form like a blazing mountain in the heights, our perfect Kakutstha of majestic appearance—my daughter’s ornamented, tender breasts have lost their splendor.
பொற்பு அமை நீள் முடிப் பூந் தண் துழாயற்கு
மல் பொரு தோள் உடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்பு உடையாட்டி இழந்தது கட்டே (10)
For him whose long, splendid crown bears cool flowering tulasī, the wondrous Lord with wrestlers’ mighty shoulders, the mystery who stands as all the many forms that stand—my chaste daughter has lost her firmness and restraint.
கட்டு எழில் சோலை நல் வேங்கடவாணனைக்
கட்டு எழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே (11)
Upon the Lord of Veṅkaṭam, set amid groves of clustered beauty, Caṭakōpa of lovely southern Kurukūr spoke a thousand of well-knit beauty. Those who master these ten of that thousand will enjoy the ordered splendor known by the dwellers of heaven.