राम
Tiruvāymoḻi
PDF

Book 5 · Decad 5

உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)

Tiruvāymoḻi 5.5 · pāsurams 32773287

எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்? நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே (1)

Mothers, how can you be angry with me? Ever since I saw our beautiful, complete Lord of sacred Kurunkuṭi, my heart departs with his conch, discus, lotus eyes, and single red-fruit mouth.

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே (2)

Look through my heart and see—do not be angry with me. Ever since I saw the complete Lord of sacred Kurunkuṭi amid the good southern groves, shining thread, earrings, Śrī’s mark upon his chest, enduring jewels, and four shoulders have come and stood everywhere.

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே (3)

Mothers, you grow angry, saying I stand and languish toward every direction. Ever since I saw the complete Lord of sacred Kurunkuṭi and its mountain-like mansions, victorious bow, mace, sword, discus, and conch stand manifest, leaving neither my eyes nor heart.

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர் தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் பூந் தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும் பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே (4)

Mothers, you grow angry because the water in my eyes will not cease. Ever since I saw the complete Lord of honey-rich, grove-filled sacred Kurunkuṭi, his flowering cool tulasī, golden crown, form, matchless silk, and sacred cord remain beside this sinner.

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே (5)

Mothers, you grow angry, saying I stand looking to every side and languish. Ever since I saw the fittingly renowned complete Lord of sacred Kurunkuṭi, his clustered-radiant tōṇṭai-fruit mouth, long eyebrows, and perfect lotus eyes rest upon this sinner’s soul.

மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும் நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே (6)

Mother will not let me see him, saying, “This girl will bring further harsh blame upon our family.” Ever since I saw the complete Lord of cool, grove-ringed sacred Kurunkuṭi, his lovely long prominent nose, lotus eyes, fruit-mouth, blue body, and four shoulders have filled my heart.

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான் நேமி அங்கை உளதே (7)

Mother will not let me see him, saying, “This girl has filled our family with harsh blame.” Ever since I saw the complete Lord of celebrated sacred Kurunkuṭi, he with tall golden body enclosed by a full flood of radiance has entered, filled, and remained within me—the discus still in his hand.

கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் மை கொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே (8)

Mothers, you grow angry, saying that I rest my good face in my hands and languish. Ever since I saw the complete Lord of cloud-crowned sacred Kurunkuṭi, red-lotus eyes, slender waist, beautiful form, thick long hair, and descending shoulders stand before this sinner.

முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் சென்னி நீள் முடி ஆதி ஆய உலப்பு இல் அணிகலத்தன் கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே (9)

Friends and mothers, you grow angry, saying, “You stand opposed to us.” Ever since I saw the complete Lord of enduring, mansion-filled sacred Kurunkuṭi, that primordial One with tall crown and endless ornaments has entered as sugarcane, milk, and nectar and will not leave my heart.

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள் வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே (10)

Mother will not let me see him, saying, “This girl’s love has gone utterly beyond bounds.” Ever since I saw the faultlessly renowned complete Lord of sacred Kurunkuṭi, one Form rises within my heart from a flood of light while assembled hosts of gods worship. No one can know it.

அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி அதன்மேல் அறியக் கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே (11)

Crying to the unknowable Lord with discus in hand and seeking fine fragrant flowers, Śaṭhakopa of good Kurukūr spoke this marked decad within his thousand upon sacred Kurunkuṭi. Those who learn it knowingly and master it become Vaiṣṇavas in this deep-ocean-ringed world.