சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே (1)
Though saying this may bring opposition, listen—I shall say it: I will give my tongue’s sweet poetry to no human patron while my Elephant, my Father, our Lord, dwells at sacred Vēṅkaṭam where bees hum “tennā, tennā.”
உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே? (2)
Why should I abandon my Father, the Father who is our great Lord and truly dwells at Kṛṣṇa’s Kurunkuṭi, ringed with full ponds and fields, to sing humans who think only themselves real and esteem their own wealth as abundance?
ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப்போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்
கழிய மிக நல்லவான் கவி கொண்டு புலவீர்காள்
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே? (3)
Poets, while our heavenly Lord stands ready to grant the path on which we may abide age after endless age, why carry your exceedingly fine celestial poetry elsewhere and debase yourselves by singing a human being?
என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்?
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே (4)
Poets, how much and for how many days will the great wealth earned by singing impermanent humans suffice? Sing the Father of heaven’s gods, crowned with flashing jewels: he will take you as himself and grant the ending of birth.
கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
கொள்ளக் குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (5)
Poets, you praise a patron for wealth that, stirred, is no better than a rubbish heap, and lose your truthfulness—there is no gain in it. Come, speak poems to my flawless, generous sapphire-hued Lord, never diminished by giving and granting all that is sought.
வம்மின் புலவீர் நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ
இம் மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேருமே (6)
Come, poets: labor with your own hands and sustain yourselves. We have looked—no wealthy person in this earth-world endures. Even if your sweet poetry praises each chosen deity, it will ultimately join my Tirumāl of the red lightning-radiant crown.
சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன்
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே (7)
His generosity and fame have no boundary; the Lord owns a thousand names. I cannot sing anyone else, uttering raw green lies about some worldly miser: “His hand is rain, his strong shoulders resemble the great mountain.”
வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய்
காயம் கழித்து அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? (8)
He is bridegroom of bamboo-shouldered Nappinnai, possessor of mature, boundless fame. I desire to sing him, leave the body, and enter beneath his paired feet. How could my mouth find words for illusory humans?
வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்
சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே (9)
I am no poet who came to sing humanity with my mouth. The cowherd Lord of the discus and consummate generosity exists for me alone. Standing here he grants both this fading life and the heavenly country, saying, “See and receive,” and gives liberation.
நின்றுநின்று பல நாள் உய்க்கும் இவ் உடல் நீங்கிப்போய்
சென்று சென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே? (10)
This body stands and sustains us for many days, then leaves; even after going and going, one seeks to end birth. For me, made poet to the One who united and created the worlds, could any other person’s poetry ever be fitting again?
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே (11)
Generous Śaṭhakopa of Kurukūr spoke this renowned decad within his renowned thousand, fitting for Kṛṣṇa, heaven’s Lord of all-embracing fame. Those able to speak this worthy, great praise will know no birth.