பத்து உடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
அரும்பெறல் அடிகள்
மத்து உறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து
ஏங்கிய எளியவே (1)
Easy of access to servants rich in devotion yet hard for others to attain, our rare Lord is the beloved of the lotus-born Lady. He stole churned butter, then let himself be bound to a mortar—how wondrously simple he became!
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு
இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழு நலம் முதல் இல
கேடு இல வீடு ஆம்
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்
முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன்
புறத்தனன் அமைந்தே (2)
His nature bends low in gracious simplicity, though he is birthless, beginningless light, complete goodness, undecaying liberation, and the everlasting Lord of all. With tender mercy he is established both within and without.
அமைவு உடை அறநெறி முழுவதும்
உயர்வு அற உயர்ந்து
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை
அற நிலம் அது ஆம்
அமைவு உடை அமரரும் யாவையும்
யாவரும் தான் ஆம்
அமைவு உடை நாரணன் மாயையை
அறிபவர் யாரே? (3)
He is the whole well-ordered path of dharma, the unsurpassed Highest, and the ground beneath beginning, ending, and every interval. He is all the immortals, all things, and all persons—who can comprehend Nārāyaṇa’s māyā?
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
அரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
எளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல
உடைய எம் பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை
இலது இல்லை பிணக்கே (4)
Our Lord is impossible to know as being of any one condition, yet to loving knowledge he is easy. He owns a thousand names and countless more; one cannot say that he has a name and form, nor that he has none—what a mystery!
பிணக்கு அற அறு வகைச் சமயமும்
நெறி உள்ளி உரைத்த
கணக்கு அறு நலத்தனன் அந்தம் இல்
ஆதி அம் பகவன்
வணக்கு உடைத் தவநெறி வழிநின்று
புறநெறி களைகட்டு
உணக்குமின் பசை அற அவனுடை
உணர்வுகொண்டு உணர்ந்தே (5)
The six systems speak of him through their several paths, yet his excellences are beyond counting: the beautiful, beginningless Lord without end. Stand in the reverent way of discipline, cut off alien paths and clinging, and know through the awareness he gives.
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு
வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை
உணர்வு அரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன்
அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்டது ஒன்றே (6)
However deeply you discern the low and high, the near and far, the embodied and wondrous states, the Lord’s condition remains difficult to know, O souls. Understand Hari, Ayan, and Hara; speak their names and bow, with the mind fixed on the One.
ஒன்று எனப் பல என அறிவு அரும்
வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன்
அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும்
இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை
நம்முடை நாளே (7)
Within forms difficult to judge as one or many stand lovely Nārāyaṇa, four-faced Brahmā, and Hara. Hold them together in your mind, sever both kinds of attachment, and spend your days doing the good that belongs to him.
நாளும் நின்று அடு நம பழமை அம்
கொடுவினை உடனே
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம்
மலம் அறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம்
நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு
மாள்வது வலமே (8)
Our ancient, cruel karma that strikes day after day will perish without remainder. Wash the mind free of stain and daily worship the auspicious feet of our Lord of Śrī; even at death, the strength is to die bowing.
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்
உலகமும் தானும்
புலப்பட பின்னும் தன் உலகத்தில்
அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்று உள
இவை அவன் துயக்கே (9)
The burner of the three cities has his place at his side, while the four-faced creator rises from his navel and fashions the fair worlds. Yet he himself is hidden within his own world—and, stranger still, all these lie within his belly. Such is his bewildering play.
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்
அமரரைத் துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும்
பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலங்
கடந்த நல் அடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன்
வணங்குவன் அமர்ந்தே (10)
His flawless wisdom can bewilder even the immortals through mighty māyās greater than heaven. Dark as a storm cloud, he strode across the broad earth with tireless lotus feet. Tirelessly I will cry to him, embrace him, bow, and remain.
அமரர்கள் தொழுது எழ அலை கடல்
கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச்
சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்
இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்
பிறவி அம் சிறையே (11)
Śaṭhakopa of flourishing Kurukūr fashioned these ten sweet acts of service within his thousand for the Lord who churned the roaring ocean while the gods rose in worship. Those who master them break the lovely prison of birth and ascend among the immortals.