உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே (1)
O my mind, rise and worship the radiant feet that end sorrow—the feet of the One whose excellence has no higher limit, who grants unclouded understanding, and who is the tireless Lord of the deathless ones.
மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும்
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே (2)
When the mind’s inward stain is gone, he rises upon the lotus. Mind cannot measure him, nor do the senses contain him. Peerless in the past, present, and future, he is my very life, with none above him.
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந்
நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே (3)
Thought cannot settle whether he lacks this or possesses that. He is form in earth and sky, yet formless; he is the senses and other than the senses. We have drawn near that one boundless, all-pervading Good.
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே (4)
He is we, this man, that man, the man beyond; this woman, that woman, the woman beyond. He is these and those, this and that, good and evil—all that has been, all that is, and all that will be.
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே (5)
Each person, knowing in a different way, reaches the feet of the one they call their god. Those chosen forms of deity are not deficient as lords, for he stands within every ordained path by which each worshipper approaches.
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே (6)
He stands, sits, reclines, and wanders; he neither stands, sits, reclines, nor wanders. No thought can fix him in any one condition, yet our steadfast Lord abides eternally in his single nature.
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே (7)
He has become the firmament, fire, wind, water, earth, and every thing spread through them. Hidden in each body as its life, he pervades all. He is the luminous Lord proclaimed by revelation, who once swallowed these worlds.
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே (8)
Beyond the knowing of the gods, the Supreme swallowed the heavens and all below. As Hara he burned the three cities; as Ayan he fashions the worlds. Astonishing even the immortals, he dissolves and orders all things.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே (9)
If we say he exists, these forms are his form; if we say he does not, these formless realities are his formlessness. Possessing both “is” and “is not” as his modes, he remains without end, pervading everywhere.
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே (10)
He pervades every drop of the cool, wide ocean, the earth, the heavens, and the vast worlds. Concealed in every hidden place and every shining thing, he fills all—the Lord who swallowed them within himself.
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே (11)
Śaṭhakopa of Kurukūr spoke this ordered decad from his thousand on the Supreme feet of him who abides as sky, fire, wind, water, earth, power, compassion, and patience. These ten lead to liberation.